முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா-பஞ்சாபில் மாநிலங்களில் பலத்த மழை

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா

சண்டிகார்,ஜூலை.- 9 - அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் இருந்து மக்கள் கொஞ்சம் நிவாரணம் பெற்றுள்ளனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதியே தொடங்கிவிட்டது. கேரளாவில் தொடங்கிய இந்த பருவமழை ஆரம்பத்தில் நல்ல மழை பெய்தாலும் கடந்த ஒருமாத காலமாக இடுக்கி மாவட்டம் உள்பட கேரளத்தின் மையப்பகுதியில் போதிய அளவு மழை இல்லை. இதனால் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் நின்றுவிட்டது. அதேசமயத்தில் வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மகாராஷ்டிராம், ராஜஸ்தான், ஆந்திரம், மேற்குவங்காளம் டெல்லி அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அரியானாவிலும் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் வெப்பம் தணிந்துள்ளது. அதிகப்பட்சமாக அம்பாலா நகரில் 8.5 செ.மீ. மழை பெய்தது. ஹிசார், சண்டிகார், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா ஆகிய இடங்களில் சுமாரான மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் யமுனா,தங்க்ரி, ரவி,பியாஸ் ஆகிய நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago