எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 10 - மத்திய அமைச்சரவை அடுத்தவாரவாக்கில் மாற்றம் செய்யப்படும் என்று பேசப்படும் சூழ்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி,மேற்குவங்க மாநில முதல்வராக ஆனதை அடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தனது பதவியை இழக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஊழலில் தற்போது சிக்கி சி.பி.ஐ.யால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனும் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மத்திய அமைச்சரவையில் பல காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முரளி தியோரா போன்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய மத்திய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சரவை அடுத்தவாரம் துவக்கத்தில் மாற்றி அமைக்கப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகை ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது தெரிவித்தார். எனவே அடுத்தவாரம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் மத்திய அமைச்சரவையில் பல அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புக்களை வைத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தொலை தொடர்புத்துறையும் மனிதவள மேம்பாட்டுத்துறையும் உள்ளது. பவன் குமார் பன்சலிடம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரம் ஆகிய இரண்டு இலாகாக்கள் உள்ளன. எனவே இவர்களது சுமையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. எனவே அம்மாநிலத்தை சேர்ந்த சிலர், பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் தெரிகிறது. மேலும் செயல்படாத சில அமைச்சர்கள் சிலர் தூக்கி எறியப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் நேற்று சந்தித்து நடப்பு அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவரிடம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருமா?தொடராதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முகர்ஜி கூட்டணி தொடரும். மேலும் அது வலுப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக ஆ.ராசா, தயாநிதிமாறனுக்கு பதிலாக வேறு சிலருக்கு தி.மு.க. அமைச்சர் பதவிகளை கேட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் வேறு சிலரை நியமிக்கும் விஷயத்தில் தி.மு.க.வுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும் கூறப்படுகிறது. கனிமொழி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தே கருணாநிதி அப்செட்டாகி உள்ளார். டெல்லிக்கு சென்றாலும் கூட அவர் சோனியாவையோ இதர தலைவர்களையோ சந்திப்பதில்லை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது என்று சொல்லப்படுகிறதே தவிர அந்த உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மத்திய அமைச்சரவை அடுத்தவாரம் மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது அப்போது தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.


