தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.- 10 - மத்திய அமைச்சரவை அடுத்தவாரவாக்கில் மாற்றம் செய்யப்படும் என்று பேசப்படும் சூழ்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி,மேற்குவங்க மாநில முதல்வராக ஆனதை அடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தனது பதவியை இழக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஊழலில் தற்போது சிக்கி சி.பி.ஐ.யால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனும் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மத்திய அமைச்சரவையில் பல காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முரளி தியோரா போன்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய மத்திய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சரவை அடுத்தவாரம் துவக்கத்தில் மாற்றி அமைக்கப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகை ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது தெரிவித்தார். எனவே அடுத்தவாரம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் மத்திய அமைச்சரவையில் பல அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புக்களை வைத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தொலை தொடர்புத்துறையும் மனிதவள மேம்பாட்டுத்துறையும் உள்ளது. பவன் குமார் பன்சலிடம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரம் ஆகிய இரண்டு இலாகாக்கள் உள்ளன. எனவே இவர்களது சுமையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. எனவே அம்மாநிலத்தை சேர்ந்த சிலர், பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் தெரிகிறது. மேலும் செயல்படாத சில அமைச்சர்கள் சிலர் தூக்கி எறியப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் நேற்று சந்தித்து நடப்பு அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவரிடம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருமா?தொடராதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முகர்ஜி கூட்டணி தொடரும். மேலும் அது வலுப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக ஆ.ராசா, தயாநிதிமாறனுக்கு பதிலாக வேறு சிலருக்கு தி.மு.க. அமைச்சர் பதவிகளை கேட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் வேறு சிலரை நியமிக்கும் விஷயத்தில் தி.மு.க.வுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும் கூறப்படுகிறது. கனிமொழி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தே கருணாநிதி அப்செட்டாகி உள்ளார். டெல்லிக்கு சென்றாலும் கூட அவர் சோனியாவையோ இதர தலைவர்களையோ சந்திப்பதில்லை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது என்று சொல்லப்படுகிறதே தவிர அந்த உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மத்திய அமைச்சரவை அடுத்தவாரம் மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது அப்போது தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்வர்
05 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
05 Jul 2022புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
-
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2022-ல் 10,000 ஆசிரியர்கள் தேர்வு
06 Jul 2022சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்
-
பூரண குணமடைந்தார் இயக்குனர் டி.ராஜேந்தர்
06 Jul 2022சென்னை : மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார்.
-
வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவு
06 Jul 2022சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஏமனில் ராணுவ தள ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து: 6 பேர் பலி
06 Jul 2022சனா : ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
கடும் வறட்சி எதிரொலி: இத்தாலியில் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
06 Jul 2022ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-
பணியின் போது விபத்தில் உயிரிழந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமா
-
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த டைசல் நிறுவனத்துடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்