முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.4 - பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கடுமையான ஆட்சேபகரமான சொற்களை பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நேர்மையற்ற, பாரபட்சமற்ற கண்மூடித்தனமான மாற்றத்தக்க போன்ற சொற்களை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா பயன்படுத்தியிருபபதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. 

ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரணை நடத்தியது. 

 கடந்த 26.12.07 ல் பிரதமருக்கு ராசா எழுதிய கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அறிவுரைகள் மீறப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இந்த கடிதத்தில் ஆட்சேபகரமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும் பிரதமரின் அறிவுரைகள் நேர்மையற்றது, பாரபட்சமானது என்றும் அந்த கடிதத்தில் ராசா கூற வருகிறாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள சொற்கள் கவலையளிக்கின்றன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்