எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பாலா, அக். 14 - டெல்லியில் கடந்த மாதம் 7 ம் தேதி ஐகோர்ட் முன்பு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் நடத்திய அந்த நாசவேலையில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் மீண்டும் நாசவேலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதனால் டெல்லியில் முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலில் அரியானா மாநிலம் அம்பாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு நீல நிற காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன. பெரிய நாசவேலைக்கு அவை பயன்படுத்தப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரகசிய தகவலை கேட்டதும் டெல்லி போலீசார் உஷாராகினர். உடனே இது குறித்து அரியானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர்.
இதற்கிடையே வெடிகுண்டு கார் பற்றிய தகவல் அறிந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அம்பாலா நோக்கி விரைந்தனர். அவர்களும் அரியானா போலீசாரும் ஒருங்கிணைந்து சிறு சிறு குழுக்களாக அம்பாலா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வெளியில் பார்க்கிங் பகுதியில் உளவுத் துறை தெரிவித்த நீல நிற கார் இருப்பதை கண்டனர். எச். ஆர். 030054 என்ற எண் கொண்ட அந்த கார்தான் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மாலை 6.30 மணி முதல் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆங்காங்கே நின்று காரை கண்காணித்தனர். காரை நிறுத்தி சென்ற தீவிரவாதிகள் மீண்டும் காரை எடுக்க வரும் போது கைது செய்யலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை யாருமே வரவில்லை. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த காரை கைப்பற்றினர். காரை திறந்து பார்த்த போது உள்ளே 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து, 5 டெட்டனேட்டர்கள், குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்யும் 2 டைமர்கள், 2 பேட்டரிகள் மற்றும் ஒரு காகித பொட்டலத்தில் ரசாயன கலவைகள் ஆகியவை இருந்தன.
அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் அவை தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. காரில் இருந்த வெடி பொருட்கள் மிகப் பெரிய நாசத்தை உண்டாக்க முடியும். அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க அந்த காரில் குண்டுகள் எடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் காரில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் குண்டு வடிவில் மாற்றப்படாமல் இருந்தது. மேலும் டெட்டனேட்டர், டைமர் இணைப்புடன் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. இதன் மூலம் அந்த வெடி பொருட்கள் அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க எடுத்து வரப்படவில்லை எனத் தெரிகிறது.
அந்த காரில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஒரு இனிப்பு கடையில் வாங்கிய பொட்டலம் இருந்தது. மேலும் வெடி பொருட்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும் குறிப்புகளும், 2 காஷ்மீர் மாநில நாளிதழ்களும் இருந்தன. இதனால் டெல்லியை தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களை தீவிரவாதிகள் அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த குண்டை வெடிக்க செய்து பெரிய நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அந்த கார் வந்ததற்கான அடையாளங்கள் தெரியவந்தன. இதையடுத்து அரியானா, பஞ்சாபில் உள்ள டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 6 பேர் அந்த காரில் வந்ததாக அரியானா மாநில போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து இந்த நாசவேலையில் ஈடுபட முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சரியான நேரத்தில் தகவல் வந்ததால் மிகப் பெரிய நாசவேலை திட்டத்தை முறியடித்துள்ளதாக அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. ரஞ்சீவ்தலால் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அம்பாலா நகரில் உள்ள ராணுவ முகாமை தகர்க்க இந்த வெடிபொருட்களை கொண்டு வந்திருக்கலாம். உண்மையை கண்டறிய எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.