எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.1 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற பொது கணக்கு குழுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி. ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த பொதுக் கணக்கு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த குழுவின் கூட்டம் அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
அப்போது அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதமும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.
இந்த குழு விசாரணைக்கு வர வேண்டும் என்று முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) ஆர்.பி. சிங்கிற்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கைக்கு சிங் மாறுபட்ட கருத்தை கூறுவதேன் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த குழு கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் இந்த கூட்டத்தை குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒத்திவைத்தார்.
இந்த கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் சாத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்றும் இந்த கூட்டம் நடக்காது என்று கூறப்படுகிறது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது. ஆனால் ரூ. 6,000 கோடிக்குத்தான் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிங் கூறுகிறார்.
முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) சிங் மட்டுமல்ல மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலையும் இந்த குழு முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரியுள்ளது. ஏனென்றால் இந்த ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கபில்சிபல் கூறியுள்ளார் என்றும் பா.ஜ.க. எம்.பி. பிரகாஷ் ஜவ்தேகார் கூறியுள்ளார்.
இதே போல இந்த ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து சி.பி.ஐ. இயக்குனரும் மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார். எனவே அவரையும் இந்த குழு முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம் எழுதியுள்ள கடிதம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. , பிஜூ ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடிதம் தொடர்பாக விடை காணப்படாத கேள்விகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குழு முன்பு ஆஜராக முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) சிங்கை அழைக்க கூடாது என்று கூறி இக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதனால் இந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே இந்த குழு கூட்டத்தை ஜோஷி ஒத்திவைத்தார்.இந்த குழு கூட்டம் கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜோஷி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்; 'டிரா' செய்தது வெஸ்ட் இண்டீஸ்
06 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி டிரா செய்தது.


