எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, நவ. -8 - கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் கடந்த பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சில வாரங்களுக்கு முன் சென்னையில் சந்தித்து பேசினார்கள். அதையடுத்து மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை, கூடங்குளத்தில் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் பிரதமரோ, நாட்டுக்கு அணு உலை மிக மிக அவசியம். எனவே இத்திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் கடிதம் எழுதினார். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. ஆனாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த நிலையில்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அணு உலை இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதே என்றும், இந்த விஷயத்தில் மக்கள் போராடத் தேவையில்லை என்றும் பேட்டியளித்தார். மேலும் பயந்தால் வரலாறு படைக்க முடியாது என்றும் அப்துல் கலாம் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆதரவாக அப்துல் கலாம் மேற்கண்டவாறு தனது கருத்துக்களை கூறியுள்ளார். ஆனால் அப்துல் கலாமின் கருத்தையும் அப்பகுதி மக்கள் ஏற்பதாக இல்லை. அவர் ஒரு விஞ்ஞானி. அப்படித்தான் கூறுவார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் இந்த விஷயம் தொடர்பாக எந்த அமைப்பையும் சாராத நடுநிலையாளர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து சொன்னால் நாங்கள் போராட்டத்தை கைவிடத் தயார் என்கிறார் இந்த போராட்டக் குழுவை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர். இந்த நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து டெல்லியில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
இந்த நாட்டின் நலன்தான் மிகப் பெரிது. இந்த தேசத்தின் நலனை எந்த காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தேசவிரோத சக்திகளுக்காக நாம் எதையும் தியாகம் செய்து விடக் கூடாது. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது அரசியல் சட்ட கடமைகளை ஆற்ற வேண்டும். இந்த அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று சில தேச விரோத சக்திகள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிபணிந்து விடக் கூடாது. போராட்டம் நடத்துபவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்தில் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் குண்டர் சட்டத்தையோ, தேசிய பாதுகாப்பு சட்டத்தையோ அமல்படுத்தி அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். நாட்டு நலனுக்காக முதல்வர் இதை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தனது அறிக்கை மூலம் முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ