எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, நவ.- 9 - பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் மம்தா பேனர்ஜி பல்டி அடித்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் இதுபோன்ற விலை உயர்வை அறிவித்தால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுமாம் அந்த கட்சி. பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு வாரத்திற்கு ஒருமுறை உயர்த்தத் தொடங்கிவிட்டது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எண்ணை நிறுவனங்களுக்கே இந்த அரசு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது. மேலும் விலை நிர்ணய உரிமையையும் அந்த நிறுவனங்களுக்கே தாரைவார்த்துவிட்டது மத்திய அரசு. இதனால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. மக்கள் வாகனங்களை வைத்துக்கொள்ளவே பயப்படுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி, மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதாக மிரட்டினார். இதை அனைவரும் உண்மை என்றே நம்பினர். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முடிவைத் தெரிவிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது பிரதமரிடம் அவர்கள் இதுபற்றி விவாதித்தனர். தங்கள் கவலையையும் வெளிப்படுத்தினர். ஆனாலும் விலை உயர்வை திரும்பப் பெறுவது பற்றி அவர்களுக்கு பிரதமர் எந்த உறுதியும் அளிக்கவில்லையாம். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்போம் என்று கூறிவிட்டு அவர்கள் நழுவிக்கொண்டனர். இன்னொரு முறை இப்படி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மிரட்டியதோடு திரிணாமுல் காங்கிரஸ் தனது பணியை முடித்துக்கொண்டது. அதாவது சமீபத்திய விலை உயர்வை அந்த கட்சி ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சுதிப் பந்தோபாத்தியாயா நிருபர்களிடம் கூறுகையில், பிரதமரிடம் எங்கள் உணர்வுகளை தெரிவித்தோம். கொல்கத்தாவில் நடந்த எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம் கொடுத்தோம் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மீண்டும் இப்படியெல்லாம் முடிவெடுத்தால் அதாவது விலையை உயர்த்தினால் அதை சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார். விலைக் குறைப்பு பற்றி பிரதமர் ஏதேனும் உறுதியளித்தாரா? என்று கேட்டபோது, அதற்கு பாதகமாக பதிலளித்தார் பந்தோபாத்தியாயா. முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டால் நாங்கள் அரசில் இருக்க மாட்டோம், விலகிவிடுவோம் என்று அவர் கூறினாராம். ஆக இப்போதைக்கு அவர் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதனால் மத்திய அரசு கவிழ்வதில் இருந்து தப்பிவிட்டது. மம்தா பேனர்ஜி என்றாலே பல்டிதானோ...?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா
04 Nov 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;


