எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணப்பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய ரூ.150 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உயரதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் உட்பட பல்துறைச் செயலாளர் அனைவரும், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 25.12.2011 அன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 27.12.2011 அன்று வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. தானே என்று பெயரிடப்பட்ட அந்த புயலானது புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே நேற்று 30.12.2011 காலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது.
தானே புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, புயல் ஆபத்திலிருந்து காப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு நான் உத்தரவிட்டேன். எனது ஆணையின் பேரில், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
மேலும், 29.12.2011 அன்று தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். 125 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப் பணித் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விழிப்புடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் தனிப்புப் படையை சார்ந்த 4 குழுக்கள் கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, புயல் மற்றும் அதன் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து நேற்று (30.12.2011) நான் ஆய்வு செய்தேன்.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், தீயணைப்புத் துறை இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை சீராக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், போக்குவரத்திற்கு தடையாக விழுந்துள்ள மரங்களை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்யவும், மின் கம்பங்களை சரிசெய்து மின் இணைப்பை இன்று மாலைக்குள் அளித்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன். உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகியவற்றிற்காக 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், தானே புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேதங்களை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பி.வி. ரமணாவையும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டி.கே.எம். சின்னையாவையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி. சண்முகத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கே.ஏ. ஜெயபாலுவையும், கடலூர் மாவட்டத்திற்கு எம்.சி. சம்பத்தையும் இன்றே செல்லும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
04 Dec 2025சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
04 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
04 Dec 2025கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.
-
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
04 Dec 2025புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 12-ம் தேி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
04 Dec 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல்வர் மு
-
டெல்லி காற்றுமாசு விவகாரம்: பார்லி., வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Dec 2025டெல்லி, டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
04 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,141 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,619 கன அடியாக சரிந்துள்ளது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணிக்கு தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
04 Dec 2025சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம் துவக்கம்
04 Dec 2025ராமேசுவரம், நாகை, மயிலாடுதுறையில் இருந்து ஆன்மிக பயணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;
-
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு பா.ம.க. அழைப்பு
04 Dec 2025சென்னை, பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம்: பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளிக்க மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
04 Dec 2025புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
-
சபரிமலையில் 15 லட்சத்தை கடந்த பக்தர்களின் வருகை
04 Dec 2025பத்தனம்திட்டா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
04 Dec 2025காந்திநகர், மதீனா - ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க மறுப்பு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
04 Dec 2025புதுடெல்லி, வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் வந்திப்பது வழக்கம் என்று தெரிவித்துள ராகுல் காந்தி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க அனுமதி மறுக்க
-
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சோனியா காந்தி
04 Dec 2025புதுடெல்லி, டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.
-
ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: எல்லோரிடமும் அன்பாக பழகியவர் என புகழஞ்சலி
04 Dec 2025சென்னை, ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.
-
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு
04 Dec 2025சென்னை, தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு
04 Dec 2025புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ள
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
04 Dec 2025திருப்பரங்குன்றம், தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
04 Dec 2025சென்னை, தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்
04 Dec 2025வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.
-
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
04 Dec 2025மதுரை, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி நேரில் வரவேற்பு
04 Dec 2025புதுடெல்லி, 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின். அவரை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.


