எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், மார்ச்.15 - கருணாநிதி கண்டு கொள்ளாததால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாறிட முன்னாள் மத்திய தி.மு.க. அமைச்சர் ராசா திட்டமிட்டு இருப்பதாக செக்கானூரணியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் தெரிவித்தார்.
மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணி கிளைக்கழக சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். தொகுதிச் செயலாளர் ஆண்டிச்சாமி வரவேற்றார். இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் குண்டு கல்யாணம், மாவட்ட கழக துணை ச்செயலாளர் ஐய்யப்பன் ஆகியோர் சிறப்புரையாறினர். அப்போது குண்டு கல்யாணம் பேசியதாவது,
ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் முன்னேறி நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண் சிசு கொலையை தடுத்து நிறுத்திய ஜெயலலிதாவை அன்னை தெரசா மனமாற பாராட்டினார். அதேபோல் இலவச சைக்கிள், பாடபுத்தகம், உழவர் பாதுகாப்பு, இதயம் காப்போம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே வெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தான் இன்றும் ஜெயலலிதாவிந் பிறந்த நாள் விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் கருணாநிதியோ மேடையில் உண்டியல் வைத்து பணம் வசூலிக்கும் நிகழ்ச்சியாக நடத்துகிறார். கொள்ளையடித்து பிழைப்பு நடத்துவதுதான் தி.மு.க. வினருக்கு கைவந்த கலை.
அதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கையெழுத்து போட்டு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி கொளையடித்துள்ளனர். இந்த வழக்கில் ராசாவை கைது செய்த சி.பி.ஐ. தற்போது கருணாநிதி குடும்பத்தையே சுற்றி வளைத்து வருகிறது. இது உலகமே காரித்துப்பும் ஊழல்.
1 ரூபாய்க்கு அரிசி போடுவதாக கருணாநிதி அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. அது வயிற்றுக்கு போடும் திட்டம் அல்ல. வாய்க்கரிசி திட்டம். இதே போல அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இந்த கொள்ளைகாரர்களை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கருணாநிதி கண்டுகொள்ளாததால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற ராசா திட்டமிட்டுள்ளார். இதனால் கருணாநிதியும் அவரது குடும்பமும் சிறை செல்வது நிச்சயம். மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புரட்சித்தலைவரின் நல்ஆட்சி மையப்போவது உறுதி இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள், பொருளாளர் அம்பலம் மாவட்ட பாசறை செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட இளைஞரணி இணைச்சயலாளர் ராமசுப்பு, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், கொக்குளம் கிளை செயலாளர் பழனி, மாணவரணி ஜெகநாதன், செல்வம், வினோத்குமார், மகாலிங்கம், சிவநேசன், தெய்வராஜ், ராஜாங்கம், ஒந்றிய இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜா, செல்வம், காசிமாயன், ஆட்டோ சுரேஷ், ராஜா, அன்பு ராஜ், ஜெயசீலன், ரமேஷ், தெய்வேந்திரன், ஜெயபாண்டி, ஜெயக்குமார், ஜெயபால், அருண்பாண்டி, செந்தில், முருகன், கருப்பையா, பிரபாகரன், ராஜிவ்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை 3 வீடியோ ஒளிப்பதிவாளர்களைக்கொண்டு முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய நடிகர் குண்டு கல்யாணம் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த நீரா ராடியா- கனிமொழி- ராசாத்தி அம்மாள் உரையாடலை மைக்கில் ஒலிபரப்பி அதற்கு தமிழில் விளக்கமளித்தார். இது மக்களிடையே பமரும் வரவேற்பை பெற்றது.
டேப் ஒலிபரப்பப்பட்ட போது திடீரென மின்சாரம் தடைபட்டது. தி.மு.க. வினரின் சதிச்செயலாக இது இருக்குமோ என்று கருதிய அ.தி.மு.க வினர் உடனடியாக ஜெனரேடேடர்களை இயக்கி கூட்டத்தில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.


