பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள 'வர்த்தகப் பயிலுனர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஜன.27 - தென்காசி, பவானி மற்றும் முதுகுளத்தூர் உட்பட 11 நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலைகளை அமைக்க ரூ. 152 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகவும், நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாகவும் சாலைக் கட்டமைப்பு விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளின் உறுதித் தன்மை அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் வண்ணமும், 152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள, 6 கி.மீ நீளமுள்ள தென்காசி நகர் புறவழிச்சாலைக்கு 9 கோடியே 70 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், 6.89 கி.மீ. நீளமுள்ள சங்கரன் கோவில் நகர் புறவழிச்சாலைக்கு 17 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயும், 7 கி.மீ. நீளமுள்ள அம்பாசமுத்திரம் நகர் புறவழிச்சாலைக்கு 19 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 4 கி.மீ. நீளமுள்ள முதுகுளத்தூர் நகர் புறவழிச்சாலைக்கு 5 கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், 11 கி.மீ நீளமுள்ள பவானி நகர் புறவழிச்சாலைக்கு 5 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும், 22.66 கி.மீ. நீளமுள்ள நாமக்கல் நகர் புறவழிச்சாலைக்கு 7 கோடியே 78 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும், 13.60 கி.மீ. நீளமுள்ள திருச்செங்கோடு நகர் புறவழிச்சாலைக்கு 4 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும், 19.50 கி.மீ. நீளமுள்ள கடலூர் நகர் புறவழிச்சாலைக்கு 27 கோடியே 72 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், 2.80 கி.மீ. நீளமுள்ள ஆற்காடு நகர் புறவழிச் சாலைக்கு 1 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயும், 11 கி.மீ நீளமுள்ள திருப்பத்தூர் நகர் புறவழிச்சாலைக்கு 6 கோடியே 19 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், 8.20 கி.மீ. நீளமுள்ள திருவண்ணாமலை நகர் புறவழிச்சாலைக்கு 6 கோடியே 23 லட்சம் ரூபாயும், பிற செலவினங்களுக்காக 41 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயும் என 11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்காக 152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளினால், நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக குறைவதுடன், பயணிகளின் பயண நேரம் மற்றும் விபத்துகள் பெருமளவு குறையும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 12 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 8 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
18 Aug 2022சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை
18 Aug 2022மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
-
இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..!
18 Aug 2022கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு 20 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்
18 Aug 2022ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்து, லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு
18 Aug 2022லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா.வுக்கு வங்கதேச பிரதமர் வலியுறுத்தல்
18 Aug 2022டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
இஸ்லாமியர்கள் அவமதிப்பால் சல்மான் ருஷ்டியை குத்தினேன் கைதான குற்றவாளி விளக்கம்
18 Aug 2022வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
-
வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்
18 Aug 2022அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
18 Aug 2022சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
-
77வது நினைவுநாள் அனுஷ்டிப்பு: நேதாஜியின் அஸ்திக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த மகள் கோரிக்கை
18 Aug 2022புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
டாஸ்மாக் பார் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது சென்னை ஐகோர்ட் உத்தரவு
18 Aug 2022சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.