எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் இந்திய அணி வீரருமான கம்பீர் பாகிஸ்தானைச் சேர்ந்த 7வயது சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக விசா பெற்றுக் கொடுத்து உதவியுள்ளார்.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே தற்போது அரசியல் ரீதியான உறவுகள் சீராக இல்லாத நிலை, எல்லையில் பதற்றம் போன்ற சூழல்கள் இருந்தாலும் மனிதநேயத்தோடு எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு கம்பீர் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த 7வயது சிறுமி ஓமானியா அலி. இந்த சிறுமிக்கு இதயத்தில் கோளாறு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. பாகிஸ்தானில் தரமான சிகிச்சை இல்லாததையடுத்து, இந்தியாவில் சிகிச்சை பெற அந்த சிறுமியின் பெற்றோர் விரும்பினர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப்பிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். முகமது யூசுப் தொலைபேசி வாயிலாக பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீரை தொடர்பு சிறுமியின் உடல்நலம் குறித்துத் தெரிவித்து, விசா பெற்றுக் கொடுக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்குச் சம்மதம் தெரிவித்த கம்பீர், உடனடியாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கவுதம் கம்பீரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு அந்த பாகிஸ்தான் சிறுமிக்கு உடனடியாக விசா வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் சிறுமியின் உடல்நலன் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் மூலம் அறிந்தேன். உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி விசா வழங்கிடக் கோரினேன்.மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவின் பெயரில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்த சிறுமிக்கு விசா வழங்கியது. இது தொடர்பாக எனக்குக் கடந்த 9-ம் தேதி கடிதமும் வெளியுறவுத்துறை எழுதியுள்ளது. ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு இந்த சிறுமிக்கு நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. பாகிஸ்தானுக்கும், ஐ.எஸ்.ஐ.க்கும் இந்தியாவுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதற்காக அந்த 7 வயது குழந்தை என்ன தவறு செய்தது. அதனால்தான் உதவி செய்தேன் எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கம்பீர் குறிப்பிடுகையில், " ஒரு சின்ன இதயம் மற்றொரு எல்லையில் இருந்து தட்டியது, இந்த எல்லையிலிருந்த இதயம் அனைத்து தடைகளையும் அகற்றியது. இனிமையான தென்றல் காற்று அந்தச் சிறிய பாதங்களை வருடட்டும், இது ஒரு மகள் தனது வீட்டுக்கு வருவது போலாகும். பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எனது நன்றி. பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் சிறுமி ஓமானியா அலியின் மாமா அலி நவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், " இந்தியாவில் எனது மருமகளுக்கு சிகிச்சை பெற விசா பெற உதவி கம்பீருக்கு நன்றி. விரைவில் இந்தியா புறப்படுவோம்" எனத்தெரிவித்தார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்:ஐ.நா. உடனடியாக தலையிட கொலம்பியா வலியுறுத்தல்
03 Jan 2026கராகஸ், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கொலம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
அறநிலையத்துறை சார்பில் ரூ.109 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
03 Jan 2026சென்னை, அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா
-
இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Jan 2026சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் பட
-
வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Jan 2026நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
03 Jan 2026புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.
-
மெக்சிகோவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி
03 Jan 2026மெக்சிகோ சிட்டி, தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை கேட்காமலே நிறைவேறும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
03 Jan 2026சென்னை, அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேறும் தி.மு.க.
-
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி
03 Jan 2026வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
-
வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் துவக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Jan 2026சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
03 Jan 2026சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Jan 2026சென்னை, ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனையானது. இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனையானது.
-
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? வெளியான புதிய கருத்து கணிப்பால் பரபரப்பு
03 Jan 2026சென்னை, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
03 Jan 2026மும்பை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது
03 Jan 2026சென்னை, இலங்கை கடற்படையால் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
03 Jan 2026சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டது.
-
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
03 Jan 2026சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
விதர்பா அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஹார்திக் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசல்
03 Jan 2026மும்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தமிழ்நாட்டில் ஜன. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
03 Jan 2026சென்னை, தமிழகத்தில் நாளை முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாள்: தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம்
03 Jan 2026புதுடெல்லி, வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம் செலுத்தினார்.
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்
03 Jan 2026டெஹ்ரான், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbs
-
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனா கட்சியினர் போட்டியின்றி வெற்றி
03 Jan 2026மும்பை, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனாவை சேர்ந்தவர்கள் போட்டியின்றி வெற்றிப்பெற்றுள்ளனர்.
-
தகவல்கள், படங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
03 Jan 2026புதுடெல்லி, பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே நமீபியா அணிகள் அறிவிப்பு
03 Jan 2026கேப்டவுன், டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


