எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை கூறினார்.
மதுரை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுக கூட்டம், தமிழ்நாடு ஓட்டலில் நடந்தது. கலெக்டர் வினய், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக எம்.ஜி.ஆர். மாற்றினார். ஜெயலலிதா ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நனவாக்கி வருகின்றனர். இந்த திட்டத்தில் கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. நான் எதையும் மறைத்து பேச மாட்டேன்.
நானும் ஒரு காலத்தில் உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்தவன்தான். மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது அதிகாலை 4 மணிக்கு எனது ஸ்கூட்டரில் வார்டு முழுவதும் வலம் வருவேன். குடிநீர் பிரச்சினையை தீர்க்க தெருத் தெருவாக செல்வேன். அப்போது பெண்கள், “என்ன ராசு இத்தனை மணிக்கே வந்துட்ட” என்று கேட்பார்கள். அந்த பெண்களின் ஆதரவு தான் என்னை இன்று ஒரு அமைச்சராக உயர்த்தி இருக் கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் முதல்-அமைச்சராக கூட வரலாம். இப்போது இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சாதாரண விவசாயி தான். நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு மக்கள் பணியாற்றுங்கள். இந்த அரசு உங்களுக்கு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், “பெரியார் பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறுகிறாரே” என்று கேட்டனர். அதற்கு அவர், “ரஜினி எப்போதும் நிதானமாக பேசுபவர். ஆனால் இந்த விஷயத்தில் அவரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். பெரியார் என்பவர் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சொல்வது தவறு. தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பங்கினை யாரும் மறுக்க முடியாது. ரஜினி தனது மகளுக்கு 2-வது திருமணம் நடத்துகிறார் என்றால், அதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் காரணம்” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க.வில் அனைவரும் முதல்-அமைச்சர்கள் தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். உடனே துரைமுருகன் அப்படியென்றால் துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பீர்களா? என்று கேட்கிறார்.
அ.தி.மு.க.வை பற்றி பேச துரைமுருகனுக்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. கட்சியின் மூத்த உறுப்பினரான துரைமுருகன் தான் தி.மு.க. தலைவர் ஆகி இருக்க வேண்டும். ஆனால் ஆக முடிந்ததா?. என்றும் ஆக முடியாது. சட்டசபையில் அதிகம் பேசுபவர் அவர் தான். அவருக்கு சட்டமன்ற தலைவர் பதவி கூட தி.மு.க.வில் தரவில்லை. அவர் முதலில் ஸ்டாலினிடம் போய் தலைவர் பதவியை கேட்க வேண்டும். உண்மையான திராவிடம் அண்ணாவின் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறது. தி.மு.க. ஒரு கட்சியல்ல. அது ஒரு குடும்ப கம்பெனி தான்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.



