எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ள அகண்ட காவிரியில் 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேலணை கட்டப்பட்டது. இதில் காவிரி ஆற்றில் 41 கண் மதகு கொண்ட மேலணையும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீரை திறந்து விடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 45 கண் மதகுகள் கொண்ட மேலணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் தெற்கு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 630 மீட்டர் நீளமுள்ள மொத்த அணையில் 110 மீட்டர் அளவுக்கு சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. முக்கொம்பு மேலணை உடைந்த மறுநாளே அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி முக்கொம்பில் புதிய அணை கட்டும் பணி கடந்த 6-3-2019 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி வந்த அவர் முக்கொம்பு அணைக்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை என்ஜினீயர்களிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளத்தால் இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு மாற்றாக புதிதாக ரூ. 387.60 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை 31-1-2021க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 484 பைல்களில் 287 பைல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1650மீட்டர் நீளமுள்ள அடித்தளசுவரில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டுள்ளன. 1532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுச்சுவரில் 500 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுசுவர் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 7800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் (சி சி பிளாக்ஸ்) 1489 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 55 எண்ணிக்கையிலான மதகு கதவுகளில் 45 மதகு கதவுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- கர்நாடகாவில் மேகதாதுவின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்து விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பினை கூறிவிட்டது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
கேள்வி:- காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்களே?
பதில்:- விவசாயிகள் தரப்பில் இருந்து எனக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு இருக்கும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம்.
கேள்வி:- அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்களை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.
தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவியா?
கேள்வி:- தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தங்கள் கட்சிக்கு மேல்சபை எம்.பி. வேண்டும் என்று கேட்டுள்ளாரே?
பதில்:- கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி தலைமை கூடி இதுபற்றி முடிவு எடுக்கும்.
கேள்வி:- பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.க்கு) எதிராக தீர்மானம் போட்டுள்ளனரே? அது போல் தமிழகத்திலும் வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- அவையெல்லாம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


