எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் அம்மா (ஜெயலலிதா) நினைவிடம் விரைவில் திறக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
சுதந்திரதின விழா :-
நாட்டின் 74-வது சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“சுதந்திரத்தை பெற்று விடுவது கூட எளிது. அதை பாதுகாப்பது அதைவிடக் கடினம். பாதுகாப்பது கூட எளிது. சுதந்திரத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும் சேரச் செய்வது கடினம்” என்றார் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித் தலைவி அம்மா, அவர்களின் வழி வந்த எனது தலைமையிலான அம்மாவின் அரசு, அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளின் அடிப்படையில் சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் அளப்பறிய முன்னேற்றம் கண்டு, ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இந்த ஆண்டு உலகத்தையே கொரோனா வைரஸ் தொற்று புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நோய் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்கு சரியான வழிமுறைகளை கடைபிடித்து, உங்களின் மக்கள் நல அரசு நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்பட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
குறிப்பாக, நாட்டிலேயே நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதனால், விலை மதிக்க முடியாத மனித உயிர்களை நாம் காப்பாற்றியுள்ளோம்.
எனவேதான் தமிழ்நாட்டில், நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நோயினால் இறந்தவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவாகவும் உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தியபோதும், அரசு விவசாய பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் அனுமதி அளித்து, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
• மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தி வருகிறோம்.
• நமது மாநிலத்தில் இருந்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 903 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் 12.8.2020 வரை 64,661 வெளிநாடு வாழ் தமிழர்களை “வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின்” மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.
• மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பஞ்சாயத்துகளில் வாழும் மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்க தகுந்த முகக் கவசங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
• தற்போது மாநில அளவில் 1,29,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்கும் ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்கும் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
• மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த சுமார் 1800 மருத்துவர்கள் 7000 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவசார் பணியாளர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
• நவீன உயிர்காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்து, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
• இதுவரை அம்மாவின் அரசு, மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கோவிட் நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சுமார் 6,650 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
அரசின் சாதனைகள்:-
• பொது முடக்க காலத்தில், உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய, ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்ற 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மாதங்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற ரேசன் பொருட்களை விலையில்லாமல் வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மேலும், அவர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கியதும் தமிழ்நாடு தான்.
• கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 நல வாரிய தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் என மொத்தம் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 2000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 13.35 லட்சம் பேருக்கு தலா 1000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
• கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளி மாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோரின்
பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் மூலம் தினமும் சுமார் 8 லட்சம் மக்களுக்கு சூடான, சுவையான, சுகாதாரமான உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டது.
• தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில், கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், கொரோனா தொற்று நோய் சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவினை அரசே ஏற்கும். இந்த சலுகை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ கல்லூரிகள் :-
அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அம்மாவின் அரசு ‘நீட் தேர்வை’ நடத்தக் கூடாது என்று கொள்கை அளவில் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வினால், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது என்பதை தெளிவாக ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் ஆகும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அம்மாவின் அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்பு மிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மாவும், அவரைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் டெல்டா விவசாயிகளின் உயிர் பிரச்சனையான காவேரி நதிநீர் பிரச்னைக்கு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்து, தொடர்ந்து அவ்வாணையத்தின் மூலமாக காவேரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி வருகிறது.
மேட்டூர் அணை திறப்பு:-
இவ்வாண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக, குறித்த நேரத்தில், அதாவது ஜுன் 12 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும், மேட்டூர் அணையில் தண்ணீரை திறப்பதற்கு முன்னரே கடைமடை வரை தூர் வாரப்பட்டு, வழக்கத்திற்கு மாறாக 10 நாட்களுக்கு முன்னரே தண்ணீர் கடைமடை வந்தடைந்தது. இதனால், டெல்டா பகுதியிலுள்ள 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் தற்பொழுது குறுவை நெல் பயிர் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.
வேளாண் மண்டலமாக அறிவிப்பு:-
டெல்டா விவசாய பெருமக்களின் கோரிக்கையினை உணர்வுபூர்வமாக உணர்ந்தும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிபடுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், மாவட்டங்களில் உள்ள காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து, குறுகிய காலத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் இயற்றி, இப்பகுதிகளில் வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பு தரும் எந்த தொழிற்சாலைகளும், திட்டங்களும் செயல்படுத்த முடியாது என்ற நிலையை அம்மாவின் அரசு உருவாக்கியுள்ளது என்பதனை விவசாயி என்ற முறையில் மிக்க பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் பெருமக்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், மீனவ நண்பர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் என்ற இடத்தில் சுமார் 1,102 ஏக்கர் நிலப்பரப்பில், 1023 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலகத்தரம் வாய்ந்த நவீன கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வளாகத்தில் தமிழ்நாட்டில் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் தப்புகுண்டு வருவாய் கிராமங்களில், புதிதாக ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்த ஆண்டு அமைக்க ஆணை வெளியிடப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலும் புதிதாக ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இவ்வாண்டே துவக்கப்படும்.
கடந்த மூன்றாண்டுகளில், அம்மாவின் அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நதிகள், ஓடைகள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், இதுபோன்று, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 730.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31,834 சிறிய தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன.
இணைப்புத்திட்டங்கள்:-
காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டம், தாமிரபரணி-கருமேனி ஆறு, நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம் என பல்வேறு நீர்வள ஆதார திட்டங்களை, நிறைவேற்றி வரும் ஒரே அரசு, அம்மாவின் அரசு.
• இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செயல் திறன் தரக் குறியீட்டின்படி பள்ளிகளில் வசதிகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கல்வி தொலைக்காட்சி:-
• கொரோனா பொது முடக்கத்தால், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கூட, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடங்களை வீட்டிலிருந்தே தொடர்ந்து கற்றுக் கொள்ள கல்வி தொலைக்காட்சி மூலமாக, காணொலிப் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், அரசு வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் காணொலிப் பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எந்தவிதமான இடையூறும் வராமல் இருப்பதற்காக, இந்த ஒதுக்கீட்டினை அரசியலமைப்பு சட்டம் ஒன்பதாவது பிரிவின் கீழ் கொண்டு சேர்த்தது சமூகநீதி காத்த வீராங்கனை அம்மா அவர்கள்தான்.
பிற்படுத்தப்பட்டோர் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காக சமீபத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மறுசீரமைப்பு செய்து, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு அவ்வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அம்மா அவர்கள் எடுத்த முயற்சியினால், சென்னை உயர்நீதிமன்றத்தில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீட்டில் சாதகமான தீர்ப்பினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக விளங்கும் அம்மாவின் அரசு, அனைத்து மாவட்டங்களிலும், முஸ்லீம் மற்றும் கிருத்துவ மகளிர் உதவும் சங்கங்களை உருவாக்கியுள்ளது. ஜெருசலம் மற்றும் ஹஜ் புனிதப் பயணம் ஆகியவற்றை தொடர்ந்து அம்மாவின் அரசு ஊக்குவித்து வருகிறது.
தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி இவ்வாண்டு முதல் 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் 2011ம் ஆண்டு முதல் இதுவரை அமைக்கப்பட்ட, 2 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 67 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மங்காப்புகழ் கொண்டு, தனது ஆளுமையால் சரித்திரத்தில் இடம் பெற்ற அம்மா அவர்களின் இல்லத்தை, நினைவிடமாக மாற்ற நிலம் எடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதனை நிருவகிக்கவும், பராமரிக்கவும், அறநிறுவனம் ஒன்று எனது தலைமையில் நிறுவ ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மேலும், அம்மா அவர்களுக்கு மெரீனாவில் நினைவிடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.