எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.2 - நடைபெறவுள்ள 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், தி.மு.க.வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் லயோலா கல்லூரியில் மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பின் சார்பில் மாநில அளவில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 21-ம் முதல் 29-ந்தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழகத்திலுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி அதற்கான முடிவுகளை வெளியிட்டனர். இந்த முடிவுகள் நேற்று லயோலா கல்லூரியில் வெளியிடப்பட்டது.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொதுமக்கள் இன்றைய தினத்தில் வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும், பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனக்கேட்டபோது,
அ.தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
தி.மு.க. அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் தி.மு.க. தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதமும்பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையில் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதில் அ.தி.மு.க. அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு சாதமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேட்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு வாக்களிப்பது தவறு என்று 80.5 சதவிகிதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் தாம் பணம் பெற்றுக் கொண்டதாக 47.9 சதவிகிதம் பேர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஒருவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தான் விரும்புகிற வேறொரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்று 31.5 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் கருத்து கேட்டபோது அந்தந்த ஊர்களில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத்தான் மையமாக வைத்து கருத்து கூறுகின்றனர். உதாரணத்திற்கு திருப்பூரில் சாயப்பட்டறைகள் குறித்தும், வேறு சில இடங்களில் மணல் கடத்தல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக்கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க. அணிக்கு 105 தொகுதிகள் வரை சாதகமாக இருப்பதாகவும், தி.மு.க. அணிக்கு 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் ஆய்வக நிர்வாகியான பேராசிரியர் ராஜநாயகம் இக்கருத்துக்கணிப்பை வெளியிட கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார். களப்பணி ஆய்வு மேற்கொண்ட மாணவர்களும் பேராசிரியர்களும் இந்த நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.
-
நாடு முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் கமிஷன் திட்டம்
14 Jul 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.