எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, ஏப். 2 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உச்ச கட்ட மோதலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. ரசிகர்களால் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டம் மும்பையில் வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 19 -ம் தேதி துவங்கியது. இதில் 14 நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.
அநைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் இறுதிப் போட்டி மும் பை வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது.
இதில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலை மையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மோதுவ து இதுவே முதல் முறையாகும்.
இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை உலகக் கோப்பையை வென்று உல்ளன. இந்திய அணி 1983 -ம் ஆண்டும், இலங்கை அணி 1996 -ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. 2 -வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போராடும்.
இதனால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிக ளின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இது நல்ல வாய்ப்பாகு ம். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படு த்தி விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரி க்காவிடம் மட்டுமே தோற்றது. வங்காளதேசம், அயர்லாந்து, நெதர் லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளை வென்றது. இங்கிலாந்து டன் டை செய்தது.
கால் இறுதியில் 4 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவையு ம், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. சிறந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
அதே நேரத்தில், இலங்கை அணியை சாதாரணமாக நினைக்க இயலா து. அந்த அணியும் இந்தியாவைப் போல சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணியும் சமபலம் வாய்ந்தது. சவால்களை சந்திக்க ஆயத்தமாக உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, சேவாக் - டெண்டுல்கர் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டெண்டுல்கர் (464 ரன்) 2 -வது இடத்திலு ம், சேவாக் (380 ரன்) 6 -வது இடத்திலும் உள்ளனர்.
அதே நேரத்தில் மிடில் ஆர்டர் வரிசையும் நன்றாக இருக்க வேண்டும். கால் இறுதி வரை சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் சிங், பாகிஸ்தானுக் கு எதிரான அரை இறுதியில் சொதப்பி விட்டார்.
இதனால் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் மீண்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதேபோல கேப்டன் தோனியும் இன்னும் முத்திரை பதிக்கும் விதத்தில் ஆட வேண்டும்.
கடந்த 2 ஆட்டத்திலும் ரெய்னா நன்றாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார். இதனால் அதிரடி வீரரான யூசு ப் பதான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
ஒரு வேளை கோலி நீக்கப்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் கோலி நன்றாக ஆடிக் கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடாவிட்டாலும் அவர் நீக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது.
பந்து வீச்சில் மாற்றம் இருக்கும். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய இறு திப் போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்குப் பதிலாக சுழற் பந் து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறுவார்.
ஆடுகள தன்மையைப் பொறுத்து 3 -வது வேகப் பந்து வீரர் இடம் பெ றுவாரா என்று தெரியும். என்றாலும், ஸ்ரீசாந்த் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இலங்கை அணி பந்து வீச்சில் சிறந்து விளங்குகிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் எடுப்பதே நல் லது. அப்போது தான் இலங்கை அணிக்கு அது கடின இலக்காக இருக் கும்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிச் சுற்று ஆட்டம் பிற்பகல் ஆட்டம் என்பதால் சுழற் பந்து வீச்சு சாதக மாக திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தாலும், 2 -வது பேட்டிங் செ ய்தாலும், சிறப்பாக ஆடக் கூடியதே. அந்த அணி இங்கிலாந்துக்கு எதி ரான கால் இறுதியில் 230 ரன் இலக்கை விக்கெட் இழக்காமல் 10 விக் கெட்டில் வென்றது.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையிலும், அந்த அணி சிற ந்து விளங்குகிறது. தொடக்க ஜோடியும், மிடில் ஆர்டர் வரிசையும் அபாரமாக இருக்கிறது. இது அந்த அணியின் பலமாகும்.
உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங் கை அணியின் துவக்க வீரர் தில்ஷான் (467) உள்ளார். கேப்டன் சங்கக் கரா 417 ரன்னும், மற்றொரு துவக்க வீரர் தரங்கா 397 ரன்னும் எடுத்து ள்ளனர்.
இதே போல ஜெயவர்த்தனே, சமரவீரா, சமரசில்வா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். இதில் ஜெயவர்த்தனே டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 -க்கு 20 ஆகிய 3 போட்டிகளிலும் நன்றாக ஆடக் கூடியவர்.
இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை மலிங்கா மற்றும் முரளீதரன் இருவரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள். முரளீதரன் முழு உடல் தகுதியுடன் இல்லை. என்றாலும் தனது கடைசி போட்டி என்பதால் ஆடுவார். மேத்யூஸ் காயம் அடைந்ததால் அவர் விளை யாட வாய்ப்பு இல்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதி ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்கேட மைதானத்தில் பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.