எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையால் ‘நிவர்’ புயலை சிறப்பாக கையாண்டு உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் வரலாற்று சாதனை படைத்து 100 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிகத் தீவிர ‘நிவர்’ புயலானது இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி அளவில் புதுச்சேரிக்கு அருகாமையில் கரையை கடந்து அதற்கு பிறகு படிப்படியாக வேகம் குறைந்துள்ளது.
நிவர் புயலால் பாதிப்புக்குளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மீட்புப் படையின் 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை நிலவரப்படி 15 மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளில் வசித்து வந்த 92,132 ஆண்கள், 93,380 பெண்கள் மற்றும் 39,886 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,25,398 நபர்கள் 3042 தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தேவையானஉணவு, சுகாதாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 880 நிரந்தர மருத்துவ முகாம்களும், 244 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு, அதில் 73,941 பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் 5000 நிவாரண முகாம்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
140 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக காற்று வீசிய போதும் உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் ஒருவரலாற்று சாதனையை இயற்கையை கையாண்டு புதிய அத்தியாயத்தை, புதிய இலக்கணத்தை நமது முதல்வர் படைத்து காட்டியுள்ளார். புயல் உருவாவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய போதும் 100 சதவீதம் மக்கள் பாதிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையின் காரணமாகவே பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கியோ, சுவர், மின்னல் இடி தாக்கியோ எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் திருவல்லிக்கேணியில் மரம் விழந்து ஒரு உயிரிழப்பும், திருவள்ளூரில் மண் சுவர் சரிந்து விழுந்தது என இருசம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இயற்கையை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக முதல்வர் கையாண்ட விதம் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். நிவர் புயலால் குடிசை வீடுகள் 85, ஒட்டு வீடு 12 என மொத்தம் 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக. ஆடு,மாடு என 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இதுவரை தகவல் கிடைத்துள்ளது. பயிர் காப்பீட்டு தொக
அதே போன்று கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த பணிகள் முடிந்தவுடன் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு தொகை மற்றும் பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.
காலை நிலவரப்படி 380 மரங்கள் விழந்து அந்த மரங்கள் 1 மணிநேரத்தில் அகற்றப்பட்டு விட்டது. நிவர் புயலால் பெய்த கனமழை பெய்ததின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராட்சத பம்புகள் கொண்டு வரப்பட்டு சாலை, வீடுகளில் புகுந்துள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு அந்த பணிகளும் அவசர கால அடிப்படையில் நடைபெற்று மழை நீர் அகற்றப்பட்டன.
கஜா, ஓக்கி, வர்தா, தானே புயல் ஆகியவை கடந்த காலங்களில் நமக்கு தந்த அனுபவத்தினை கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் வழங்கியதன் அடிப்படையில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக நிவர் புயலை பத்திரமாக எந்த சேதமும் ஏற்டாத வண்ணம் அனுப்பி வைத்துள்ளோம்.
நிவர் புயல் உருவதற்கு 10 நாட்களுக்கு முன்பே அரசின் அறிவிப்புகளை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த அரசின் உத்தரவுகளை மக்கள் 100 சதவீதம் பின்பற்றியதன் காரணமாக நிவர் புயலை பாதுகாப்பாக நாம் கடந்து உள்ளோம். இதற்கு அனைத்து துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே போன்று நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டகளில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியண், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு பகல் உறங்காமல் மக்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதே போன்று வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு மழை பொழிவு என்பது இருக்கும். அந்த வகையில் எதிர்வரக்கூடிய காலங்களில் புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வுநிலைகளை தொடர்ந்து கண்காணிக்க தேவையான கட்டமைப்புகளை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார். ஆகவே 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சென்னையை பொறுத்தவரை 4133 பாதிக்கபடக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கனவே நான் பலமுறை தெரிவித்துள்ளேன். தமிழக முதல்வரும் அறிவுரையின் படி உள்ளாட்சிதுறை அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது மழைநீர் தேங்கும் பகுதிகள் 100க்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. நான் முழுபூசணிக்காயை சோற்றில்மறைக்க விரும்பவில்லை. தொடர் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி மழை விட்ட பின்னர் 1 மணிநேரத்திற்குள் சென்று விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் புயல் உருவானதால் அது கடந்த சென்ற பிறகு தான் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முதல் செம்பரபாக்கம் ஏரியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், எதிர்கட்சி தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். ஆனால் அவர் செல்லும் போது மழை நீர் வடிந்து சாலைகள் நடந்து சென்ற காட்சிகளையே நாம் பார்க்க முடிந்தது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மழைநீர் எங்கு தேங்கியிருக்கிறது என்பதை தேடி அலைய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறுஅவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .