எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரம்குன்றம்,ஆக.8 - மதுரை அருகே டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதால் சாலை மறியலில் பலர் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடியில் உள்ள அம்பேத்கர், சின்ன உடைப்பில் உள்ள அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகளின் தலைகள் நேற்றுமுன்தினம் அதிகாலை உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் மயில்வாகன், கண்ணன், டி.எஸ்.பி.க்கள் ராஜன், புருசோஷத்தமன் உள்பட போலீசார் அதிகாலை 3.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். தகவலறிந்த அப்பகுதியினர் அதிகாலை 5 மணிக்கு சாலையில் அமர்ந்தனர். இதனால் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்துதுறைக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. தென்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டன. அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்றுக்காலை சரியாக 9 மணிக்கு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சின்ன உடைப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார். உடைக்கப்பட்ட சிலைகள், சீரமைக்கப்பட வேண்டும். உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வெண்கல சிலைகள் 15 நாட்களுக்குள் நிறுவப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். சிலைகள் உடனடியாக சீரமைக்கப்படும். உடைத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெண்கல சிலை அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலை மறியலை கைவிட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டுக்கொண்டார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு உடன்படவில்லை. அதனைத்தொடர்ந்து பெருங்குடிக்கு வந்த கலெக்டர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். அவர்களும் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஒரு குழு அமைப்போம். அரசிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்போம் என கலெக்டர் மேலும் தெரிவித்தார். அவர்கள் உடன்படவில்லை நேற்று சரியாக பகல் 12 மணிக்கு பெருங்குடியில் சாலையில் அமர்ந்திருந்தோர் ஓரத்திற்கு சென்றனர். ஒரு பிரிவினர் ரோட்டில் சமைப்பதற்கு பாத்திரங்களை கொண்டுவந்தனர். போலீசார் சமாதானம் செய்தபின், ரோட்டின் ஓரத்தில் சமையல் செய்தனர். இதனால் நேற்று முழுவதும் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களை கைது செய்வோம். சிலைகள் சீரமைக்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவகையில் அனைத்து சிலைகளுக்கும் இரும்பு கிரில் பாதுகாப்புக்காக போடப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



