எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டாலினின் அப்பா முதல்வராக இருந்தார். தி.மு.க. தலைவராக இருந்தார். ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார். எம்.எல்.ஏ. ஆனார், துணை முதல்வரானார். மக்களுடைய துயர் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் ஸ்டாலின். நான் அப்படியல்ல, உங்களைப் போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து படிப்படியாக வந்தவன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.2.2021) திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு அ.தி.மு.க. அரசு. ஜெயலலிதா இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென்று தெரிவித்தார். அவரது மறைவிற்குப் பிறகு அவர் வழியில் செயல்படும் அரசு தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தந்துள்ளது. 2006 ஆட்சியில் அப்போதிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாகச் சொன்னார். எத்தனை பேருக்கு நிலம் கிடைத்தது? அப்படி மக்களை ஏமாற்றுகின்ற கட்சிதான் தி.மு.க. நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். அ.தி.மு.க. அரசு உங்களுடைய அரசு.
ஆட்சியில் இருக்கும்போது மக்களை கவனிக்க மாட்டார்கள், மக்களின் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார்கள். ஆனால், வெற்றி பெறுவதற்காக, வாக்குகளைப் பெறுவதற்காக ஊர் ஊராக வந்து பொய் பேசி, நாடகமாடி, உங்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்ற கட்சிதான் தி.மு.க. நான் எதுவும் பொய் பேசவில்லை.
நான் உங்களைப்போல கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வாழ்ந்து வாழ்கின்றவன், இன்றைக்கும் நான் விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே, மக்களின் துன்பங்கள், பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். எனவே, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்து, நாங்கள் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறோம்.
ஸ்டாலின் அப்படியல்ல. அவரது அப்பா முதல்வராக இருந்தார், தி.மு.க. தலைவராக இருந்தார், எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார்கள், எம்.எல்.ஏ. ஆனார், துணை முதல்வரானார். மக்களுடைய கஷ்டம் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் தி.மு.க. தலைவர்.
நான் அப்படியல்ல. உங்களைப் போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கட்சியில் கிளைக் கழகச் செயலாளராக தொடங்கி, படிப்படியாக உயர்ந்து எம்.எல்.ஏ ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சராகி, முதல்வர் ஆகியுள்ளேன். கட்சியிலும் அப்படித்தான் பதவி கிடைத்திருக்கிறது. ஆகவே, உழைத்தால் அந்த உழைப்பின் அருமை தெரியும். உழைக்காமலிருந்தால் அந்த அருமை தெரியாது, கஷ்டம் தெரியாது, பிரச்சினை தெரியாது, மக்களுக்கு நன்மை செய்யத் தெரியாது.
மேடையில் மிட்டா மிராசுதாரரா உட்கார்ந்திருக்கிறோம்? தி.மு.க. ஆட்சியில் எங்களைப் போல் இருப்பவர்கள் யாராவது இந்தப் பதவிக்கு வரமுடியுமா? விடுவார்களா? கருணாநிதி, ஸ்டாலின், இப்போது உதயநிதி. குடும்பம்தான் ஆட்சிக்கு வர முடியும், வேறு யாரையும் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள், அதிகாரத்திற்கும் வரமுடியாது. தமிழ்நாடு முழுவதும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
எல்லா மீட்டிங்கிலும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். வேறு யாராவது வந்தால் கட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் என்று பயம். அ.தி.மு.க.வில் அப்படியில்லை. நான், எம்.எல்.ஏ, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் வருவார்கள், மேடையிலிருக்கும் அனைவரும் உங்களைச் சந்தித்து உங்களுடைய எண்ணங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள். இது மக்களுடைய அரசாங்கம். நான் முதல்வர் என்று எப்போதும் எண்ணியதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்றீர்களே, நீங்கள் தான் முதல்வர். நீங்கள் போடுகின்ற உத்தரவைச் செயல்படுத்துகின்ற பதவி முதல்வர் பதவி. ஸ்டாலின் அப்படியில்லை. மூன்று மாதத்தில் முதல்வராகி விடுவாராம். எப்படி முடியும்? தேர்தல் அறிவித்து, மக்கள் ஓட்டுப் போடவேண்டும், எண்ண வேண்டும், பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறவேண்டும், அப்போதுதான் வரமுடியும்.
முதல்வர் பதவி, கடையில் கிடைக்கும் பொருளா, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? மக்களால் தேர்ந்தெடுக்கின்ற பதவி. அதை மறந்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களைச் சந்தித்து, என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்று சொல்கிறோம், இன்னும் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்கிறோம். மக்கள் அதை நம்புகிறார்கள், மக்கள் வாக்களிக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
எவ்வித கட்டணமுமின்றி கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
03 Feb 2026சென்னை, வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும
-
அமெரிக்காவின் வரிக்குறைப்பு எதிரொலி: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்: மத்திய நிதியமைச்சர்
03 Feb 2026டெல்லி, அமெரிக்காவின் வரிக்குறைப்பு காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரிக்குறை
-
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: வருகிற 6-ம் தேதி முதல் த.வெ.க. சார்பில் விருப்பமனு விநியோகம்
03 Feb 2026சென்னை, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சியின் தோழர்கள் வரும் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) முத
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் அதிகரிப்பு
03 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விறபனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர்
03 Feb 2026புதுடெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும் என்று தெரிவித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –03-02-2026
03 Feb 2026 -
39 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
03 Feb 2026புதுடெல்லி, பல்வேறு தேர்தல் வெற்றிகளால் திருப்தி அடைந்து விடக்கூடாது என்ற தே.ஜ.
-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்
03 Feb 2026நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.
-
மகளிர் உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாகியுள்ளது: அமைச்சர்
03 Feb 2026சேலம், கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ.
-
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார் கொலம்பியாவின் அதிபர் அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை
03 Feb 2026நியூயார்க், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச
-
45 பவுன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பாராட்டி தங்கச்சங்கிலி பரிசளித்தார் ரஜினி
03 Feb 2026சென்னை, தான் கண்டெடுதத் 45 பவுன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி அவரை நேரில் வரவழைத்து தங்கச்சங்கிலியை நடிகர் ரஜினிகாந்த் பரிசளித்த
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
விரைவில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு
03 Feb 2026சென்னை, முதுகலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
234 சட்டசபை தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா..? அண்ணாமலை கேள்வி
03 Feb 2026சென்னை, விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது
03 Feb 2026ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சர்வதேச நிச்சயமற்ற சூழ்நிலையால் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம்? மத்திய நிதி அமைச்சர் விளக்கம்
03 Feb 2026புதுடெல்லி, தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
-
திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி
03 Feb 2026திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
நாட்டை விற்றுவிட்டார்: பிரதமர் மீது ராகுல் விமர்சனம்
03 Feb 2026புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
-
தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகினார் அண்ணாமலை..!
03 Feb 2026கோவை, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்
03 Feb 2026தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு
-
ரஷ்யாவில் ஒரு அரிய நிகழ்வு: வானில் தோன்றிய 4 நிலவுகள்:
03 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள்.


