எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் இணைந்து கொரோனா விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் உள்ள இடங்களில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒருநாளில் மட்டும் 128 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களை போலீசார் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
முககவசம் அணியாமல் கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக கடந்த 10 நாட்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 662 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 34 ஆயிரம் வழக்குகளும், 17-ந்தேதி 34 ஆயிரத்து 224 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில் தனி மனித இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 13,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 867 வழக்குகளும், நேற்று 17-ந்தேதி 720 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா விதிமீறல் தொடர்பான கண்காணிப்பில் போலீசார் முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் கண்காணிப்பில் ஈடுபடும் போலீசாரை கண்டதும் கொரோனா விதி மீறலில் ஈடுபடுபவர்கள் தெருக்களில் புகுந்து பலர் தப்பி வருகின்றனர். இதே போல் தெருக்களிலும் சமூக இடைவெளி, முககவசம் இன்றி கட்டுப்பாடுகளை மீறி வருகின்றனர்.
இதையடுத்து முக்கிய சாலைகளில் மட்டுமின்றி தெருக்கள் தோறும் கண்காணிப்பை அதிகப்படுத்த போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ரோந்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தெருக்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தி முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு வலியுறுத்துவதோடு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
வரும் நாட்களில் கொரோனா விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பெரம்பூர், செம்பியம் போலீஸ் குடியிருப்பில் காவலர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு விதிகளை பொது மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.
புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநகராட்சி, சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி போலீசார் செயல்படுவார்கள்.
நடிகர் மன்சூர் அலிகான் மீதான புகாரை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி ஆலோசித்து வருகிறோம். ஆலோசனைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்
22 Aug 2025புதுடெல்லி : வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம் என்று அறிவிப்பு.
-
கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
22 Aug 2025சென்னை : கருணை அடிப்படையிலான பணி விதிமுறை திருத்த அரசாணையை வெளிட்டது தமிழக அரசு.
-
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
22 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிற
-
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் - பாசித் அலி
22 Aug 2025கராச்சி : இந்தியாவுக்கு பாசித் அலி சவால் அளித்துள்ளார்.
-
பழனியில் ரூ.1.22 கோடி செலவில் பஞ்சாமிர்த விற்பனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Aug 2025பழநி : பழனியில் பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
-
முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் - அமைச்சர் காட்டம்
22 Aug 2025திருச்சி : முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் என அமைச்சர் கே.என் நேரு காட்டமாக பேசினார்.
-
த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது- அமைச்சர் மூர்த்தி
22 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
-
3 நாட்கள் தொடர் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை
22 Aug 2025திருச்சி : 3 நாட்கள் தொடர் பிரசாரத்திற் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார்.
-
இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி பேச்சு
22 Aug 2025பாட்னா : இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
22 Aug 2025விருத்தாசலம் : சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
தேர்தல் நெருங்கும் பீகாரில் ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
22 Aug 2025பீகார், தேர்தல் நெருங்கும் பீகாரில் ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
புதுவையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
22 Aug 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
-
ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு
22 Aug 2025டெல்லி, ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வரை இழப்பு தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
22 Aug 2025சென்னை : தங்கம், வெள்ளி விலை நிலவரம்.
-
நெல்லையில் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாடு: அமித்ஷா பங்கேற்பு
22 Aug 2025திருநெல்வேலி : நெல்லையில் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் கலந்து கொள்ள அமித் ஷா பங்கேற்றார்.
-
ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா வீரர்
22 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்தார் தென் ஆப்பிரிக்கா வீரர்.
-
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை
22 Aug 2025டெல்லி, இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று தமிழகம் வரவிருக்கிறார்.
-
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
22 Aug 2025சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
-
ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்த்
22 Aug 2025நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்தன்.
-
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த அதிபர் புதின்
22 Aug 2025வாஷிங்டன், அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை அதிபர் புதின் பரிசளித்தார்.
-
இந்தியா மீதான வரிவிதிப்பு அடுத்த வாரம் அமல்: ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதி
22 Aug 2025வாஷிங்டன் : இந்தியா மீதான வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் எனறு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதிபட தெரிவித்தார்.
-
உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்ட போதே ஓய்வு எண்ணம் வந்தது
22 Aug 2025டெல்லி, : உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்ததாக ராகுல் திராவிட் பேசினார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா
22 Aug 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழாவில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
-
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு: பா.ஜ.க.-வின் பி-டீம் என்பது நிரூபணம்: ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை விமர்சித்த காங்கிரஸ்
22 Aug 2025ஆந்திர பிரதேசம், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு பா.ஜ.க. வின் பி டீம் என்பது நிரூபணம் செய்த ஜென்மோகன் ரெட்டி கட்சியை விமர்சித்த காங்கிரஸ்.
-
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுக்லா சந்திப்பு
22 Aug 2025டெல்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுக்லா சந்தித்து பேசினார்.