எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புது டெல்லி: ஆஃப் திசையின் கடவுள், தாதா, கொல்கத்தா இளவரசர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலியின் 49-வது பிறந்த நாளான நேற்று ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். கொல்கத்தாவின் இளவரசர் என்று ரசிகர்களால் புகழப்பட்ட கங்குலி, 1997-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக திராவிட்டும், கங்குலியும் சேர்ந்து அடித்த 318 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிரிக்கெட் உலகை மிரட்டியது. இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் சேர்த்தார் கங்குலி.
2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தலைதூக்கியபின் அமிக்கு கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்துதான் அணித் தேர்வில் புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்பட்டன. ஜாகீர்கான், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு ஊக்கமாக இருந்து வழிகாட்டியவர் சவுரவ் கங்குலி. அவர்கள் மீது அதீதமான நம்பிக்கை வைத்திருந்தார். கங்குலிக்கு அடுத்தபடியாக வெற்றி கேப்டனாக வலம் வந்த டோனியும் கங்குலியின் கண்டுபிடிப்புதான்.
பேட்டிங்கில் ஆவேசத்தையும், களத்தில் ஆக்ரோஷத்தையும் இணைத்துச் செயலாற்றுவதுதான் கங்குலியின் பழக்கமாகும். கங்குலி மட்டும் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், நேரம் செல்லச் செல்ல பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கும். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.
இதுவரை எந்த இந்திய கேப்டனும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை. 424 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 18 ஆயிரத்து 576 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய அணிக்கு மொத்தாக 197 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய கங்குலி 95 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் தொடரை வென்றது, ஆஸ்திரேலியாவின் தொடர் 16 டெஸ்ட் வெற்றிக்கு 2001-ல் முற்றுப்புள்ளி வைத்தது, 2-1 என்று தொடரை வென்றது, கங்குலி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றது எனப் பல சாதனைகளைச் சொல்லலாம்.
311 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கங்குலி 11,363 ரன்கள் குவித்துள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள் சேர்த்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான கங்குலி, சச்சினுடன் சேர்ந்து தொடக்க ஜோடியாகக் களமிறங்கி மிரட்டி இருக்கிறார். இருவரும் சேர்ந்து 136 போட்டிகளில் 6,609 ரன்கள் சேர்த்துள்ளார்கள்.
21 முறை 100 ரன்களுக்கு மேலாகவும், 23 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள். ஆப் திசையின் கடவுள் என்று ராகுல் திராவிட்டால் புகழப்பட்டவர் சவுரவ் கங்குலி. தெரிந்தோ தெரியாமலோ கங்குலிக்கு ஆஃப் திசையில் பந்துவீச்சாளர் பந்து வீசிவிட்டால் பந்து சிக்ஸர், பவுண்டரி திசையில் பறக்கும். கங்குலி ஆப் திசையில் கவர் டிரைவ் விளையாடும் அழகே தனி.
2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கங்குலி தலைமையில் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று திரும்பியது. பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டை முதல் முறையாக இந்தியா வீழ்த்தியது. 2005-06ஆம் ஆண்டு பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற கங்குலி, ஐபிஎல் தொடரில் விளையாடி 2012-ம் ஆண்டு உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.
பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு நேற்று 49-வது பிறந்த நாள். அவருக்கு சேவாக், விவிஎஸ் லட்சுமண், முகமது கைஃப், பிசிசிஐ அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வி.வி.எஸ். லட்சுமண் டுவிட்டரில் பதிவிட்ட கருத்ததில், பிறந்த நாள் வாழ்த்துகள் கங்குலி. வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கட்டும். அடுத்துவரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் ப க்கத்தில், நல்ல உடல் ஆரோக்கியமும், உற்சாகமும் தாதாவுக்கு எப்போதும் கிடைக்கும். பிறந்த நாள் வாழ்த்துகள் தாதா எனத் தெரிவித்துள்ளார்.
முகமது கைப் தனது டுவிட்டர் பக்கத்தில், களத்தில் அணியை தாதா வழிநடத்தினாலே, நீங்கள் தலைநிமிர்ந்து செல்வீர்கள். நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் தோளில் தட்டிக்கொடுத்து வழிநடத்தும் தாதாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் விவகாரம்: நயினார் நாகேந்திரன்
23 Aug 2025சென்னை : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்
23 Aug 2025காலி : கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் கைதுக்கு ராஜபக்ச கண்டனம்
23 Aug 2025இலங்கை : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம்: வரும் செப். 1 முதல் தொடக்கம்
23 Aug 2025சென்னை : அ.தி.மு.க.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
அனில் அம்பானி இடங்களில் சோதனை
23 Aug 2025புதுடெல்லி, பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்
-
தூய்மை பணியாளர் பலி: 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும்: அமைச்சர் தகவல்
23 Aug 2025சென்னை, உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்க்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
வருடாந்திர உச்சி மாநாடு: பிரதமர் மோடி 29- தேதி ஜப்பான்-சீனா பயணம்
23 Aug 2025புதுடெல்லி, பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை வருகிற 29-ந்தேதி தொடங்குகிறார்.
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் : ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
23 Aug 2025டெல் அவிவ் : காசா நகரை முற்றுகையிட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி வழங்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து பாதுகாப்பு அ
-
எஸ்.சுதாகர் ரெட்டி மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
23 Aug 2025சென்னை : எஸ்.சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்,
-
அமெரிக்காவில் விபத்து: 5 இந்தியர்கள் காயம்
23 Aug 2025நியூயார்க் : அமெரிக்காவில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
23 Aug 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
-
அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாக தி.மு.க. மாடல் அரசு உள்ளது: சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Aug 2025சென்னை, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ நியமனம்
23 Aug 2025நியூயார்க் : இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி.
-
உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம-தேடும் பணி தீவிரம்
23 Aug 2025உத்தரகாண்ட் : உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியு
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: செப்டம்பர் 24 வரை நீட்டிப்பு
23 Aug 2025புது டெல்லி, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.