எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர ஒயாது உழைப்போம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். சபதம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆ.ரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழா கொண்டாடுகிறது.
அ.தி.மு.க. 17.10.2021 அன்று 49 ஆண்டு கால வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதையும், இந்தப் பொன் விழா ஆண்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் எனக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கிறது என்பதையும் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நினைவில் கொள்கிறேன்.
கட்சி பணியாற்றிய நேரத்தில் உயிர் நீத்த உத்தமத் தொண்டர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். கட்சியை உயிரினும் மேலாய் மதித்து வாழும் தொண்டர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியல் வரலாற்றை உற்று நோக்கிப் பார்த்தால், ஏதோ ஒரு கணக்கோடுதான் அரசியல் கட்சிகள் தோன்றுகின்றன. ஆனால், கணக்கு கேட்டதற்காக, ஊழலைத் தட்டிக் கேட்டதற்காகப் பிறந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. அதனால் தான், தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில் திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலைச் சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தைப் படைத்தது.
இதன் தொடர்ச்சியாக, 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவரின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்ற தி.மு.க.வின் சதித் திட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமால் இருந்தது.
அவரின் மறைவிற்குப் பிறகு, சில துரோகிகளின் துணையோடு கட்சியை அழிக்க நினைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதன் விளைவு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. “சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும்' என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக மக்கள் விரோத ஆட்சி மீண்டும் உருவானது. கட்சி பிளவுபட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், சேவல்' சின்னத்தில் தனியாகக் களம் கண்டு, தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை அவரை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பிளவுபட்ட கட்சி மீண்டும் ஒன்றிணைந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான அம்மா ஆட்சிக் காலத்தில், தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியது, மகளிருக்கு என்று தனிக் காவல் நிலையங்களை உருவாக்கியது, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்திக் காட்டியது, உலகத் தரம் வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல்துறையை நவீனமயமாக்கியது என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன.
1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சியை அமோக வெற்றி பெறச் செய்து, இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி நல்கிய அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது கடினம்என்று உணர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி2006-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். இருப்பினும், தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சிதான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது.
2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக மீண்டும் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப் போய்விட்டது.
போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., எந்தெந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்களோ அவற்றை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், விடியலை நோக்கி எனப் பிரச்சாரம் செய்துவிட்டு இன்று விடியா அரசாக காட்சி அளிக்கிறது. சட்டப்பேரவை அடுத்த வாரிசின் புகழ்பாடும் மன்றமாகிவிட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குடும்பத்தின் பிடியில் தி.மு.க. சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அ.தி.மு.க. தோன்றி 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு தொடங்கும் இப்பொன்னாளில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஒயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்.
இவ்வாறு ஓ.பி.எஸ்.தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.