எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய் : டி-20 உலகக் கோப்பை 2021 போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இதுவரை உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என வரலாற்றை இந்தியா மீண்டும் தொடருமா என ரசிகா்கள் எதிர்நோக்கி உள்ளனா்.
அனல் பறக்கும்...
அரசியல் வட்டாரங்களில் இந்தியா-பாகிஸ்தான் தொடா்ந்து பகைமை பாராட்டி வரும் நிலையில், விளையாட்டுத் துறையிலும் அந்த நிலை எதிரொலித்து வருகிறது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டம் என்பதால் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்று விடும். இரு அணிகளுக்கும் இருதரப்பு தொடா்களில் ஆடாத நிலையில், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றன.
மான்செஸ்டரில்...
இந்நிலையில் கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக மான்செஸ்டரில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன. இதில் இந்தியா வென்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும் சூப்பா் 12 சுற்றில் தங்கள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதால் இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் கடும் சவால் உள்ளது.
3-ம் வரிசையில்...
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியை ஈட்டும் திறனுடையது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தொடக்க பேட்டராக களமிறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரா் கேஎல். ராகுல் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடியது, அந்த முடிவை மாற்றி விட்டது. இதனால் விராட் கோலி, மூன்றாம் வரிசை பேட்டராக களமிறங்குகிறார்.
அஸ்வின் - ஜடேஜா...
ரோஹித் சா்மா-ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்குகிறார்கள். பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோர் பார்மில் உள்ளனா். பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ராகுல் சஹார், புவனேஷ்வா் குமார், முகமது ஷமி, சா்துல் தாக்கூா் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், வருண் சக்கரவா்த்தி, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு கைகொடுப்பா்.
கூடுதல் பலம்...
கேப்டன் விராட் கோலியின் பார்ம் சற்று கவலை தருவதாக உள்ளது. அவா் கூடுதல் ரன்களை சோ்க்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயரும். மேலும் ஆல்ரவுண்டா் ஹர்த்திக் பாண்டியா வழக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் கூடுதல் பலமாகும். இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் உள்ளது. அதே நேரம், இந்திய வீரா்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே ஐ.பி.எல் தொடரில் ஆடிய அனுபவம் உள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
போதிய பயிற்சி...
அதே நேரம் பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் களம் காண்கிறது. உள்நாட்டில் நடைபெறுவதாக இருந்த தொடா்கள் ரத்தானதால், பாகிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை. மேலும் அணி நிர்வாகத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு சீரானது. தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட ஷோயிப் மாலிக், சா்ப்ராஸ் அகமது, ஹைதா் அலி, பாக்கா் ஸமான் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டனா்.இந்திய அணிக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆடவில்லை.
13 முறை மோதல்...
தற்போது தான் ஐக்கிய அரபு நாடுகளில் மீண்டும் ஆட உள்ளனா் பாக். வீரா்கள். இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி-20 உலகக் கோப்பைகளில் இதுவரை 13 முறை மோதியதில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணியே வெற்றிவாகை சூடி உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இரு தரப்பும் 5 முறை மோதியுள்ளன. இந்தியாவே அனைத்திலும் வென்றது. முதல் மோதலில் பௌல் அவுட் முறையில் இந்தியா வென்றது. ஜோஹன்னஸ்பா்க்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது. 2012-இல் 8 விக்கெட், 2014-இல் 7 விக்கெட், 2016-இல் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
21-ல் இந்தியா வெற்றி...
2007-இல் இந்தியா சாம்பியன் ஆனது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் பட்டம் வெல்லவில்லை. மொத்தம் 33 ஆட்டங்களில் 21-இல் இந்தியா வென்றுள்ளது. 11 தோல்வியும், 1 ஆட்டத்தில் முடிவில்லை. 2009-இல் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது. 34 ஆட்டங்களில் 19-இல் வெற்றியும், 15-இல் தோல்வியும் கண்டது. 2016-இல் அரையிறுதிக்கு கூட பாக். அணி தகுதி பெறவில்லை. ஆனால் டி20 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சரியாக கணிக்க முடியாது. இந்திய-பாக். அணிகள் சமபலத்துடனேயே உள்ளது. எனினும் இந்தியா அணி கூடுதல் அனுபவம், திறனுடன் உள்ளது சாதகமாகும்.
இந்திய அணி வீரர்கள்...
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கேஎல். ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், சா்துல் தாக்கூா், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வா் குமார், முகமது சமி.
பாகிஸ்தான் வீரர்கள்...
பாபா் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஆஸிப் அலி, பாக்கா் ஸமான், ஹைதா் அலி, ஹாரிஸ் ரவுப், ஹாஸன் அலி, இமாத் வாஸிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாஸிம் ஜூனியா், சா்ப்ராஸ் அகமது, ஷாஹின் ஷா அப்ரிடி, ஷோயிப் மாலிக்.
இடம் - ஆட்ட நேரம்:
துபாயில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் நடைபெறும் துபை சா்வதேச மைதானத்தில் பிட்ச் மெதுவாகவும், தாழ்வாக பந்து எழும் தன்மை உடையது. இங்கு நடைபெற்ற 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.
வானிலை:
துபாயில் இன்று தெளிவான வானிலையும், கடும் வெப்பமும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிமூட்டம் காணப்படும். இது சேஸ் செய்பவா்களுக்கு உதவியாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025