எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : புதிதாக துவங்க உள்ள என்.எல்.சி.-யின் மூன்றாம் சுரங்கத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு மக்களின் கோரிக்கை அடிப்படையில் இழப்பீடு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் டி.எம். ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டுப் பற்றாலும், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கியதன் காரணமாக, 1956-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.
தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலையமும் துவங்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், லாபத்துடன் இயங்கும் ஒரு சில நிறுவனங்களில் என்.எல்.சி.-யும் ஒன்றாகும். லாபத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்.எல்.சி. தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசின் சார்பாக சுமார் 5 சதவீத பங்குகளை வாங்கினார். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மீதும், அதற்கு நிலம் வழங்கியவர்கள் மீதும், ஜெயலலிதாவும், தொடர்ந்து எனது தலைமையிலான அதிமுக அரசுக்கும் இருந்த அக்கறையும், கரிசனமும் இந்த தி.மு.க. அரசுக்கு இல்லாதது வேதனைக்குரியது. தற்போது என்.எல்.சி. நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் காணொலி மூலம் 17.1.2022 அன்று என்எல்சி நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகு களில் சென்ட்டுக்கு 40,000/- ரூபாயும், நகரப் பகு களில் 75,000/- ரூபாயும் வழங்கப்படும் என்றும்,
மேலும், மறு குடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில், 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும் என்றும் என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும், ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. என்.எல்.சி. நிறுவனம் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக் கேட்காமல், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத்திட்டத்தை ஒரு தலைபட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த அறிவிப்பை ஒரு சதவீத மக்கள்கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
17.1.2022 அன்று என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தங்களுடைய சந்தேகத்தை, கேள்வியை எழுப்பியபோது, அதற்கு சரியான பதில் அளிக்காமல் பாதியிலேயே நிர்வாகம் கூட்டத்தை முடித்துக்கொண்டது. அப்போது, அதில் கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், மக்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல், நிர்வாகத்துடன் இணைந்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டது, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய நல்ல விளைச்சல் நிலங்களாகும்.
ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 லட்சத்திற்கு மேல் ஆகும். அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டு மனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது. என்று கூறிய அப்பகுதி மக்கள், அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வசதியும் இழந்து பரம்பரைத் தொழிலான விவசாயத்தையும் இழக்கின்ற சூழ்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை சில ஆண்டுகளிலேயே செலவு செய்துவிட்டு, வறுமையின் பிடியில் சிக்கிக்கொள்ளக் கூடிய நிலையை கருத்திற்கொண்டு, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 1956ம் ஆண்டு துவங்கப்பட்ட என்எல்சி நிறுவத்தின் ஆண்டு வருமானம் இன்று சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 1977-89 காலக்கட்டத்தில் நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர்.
இன்றைய தேதியில் சுமார் 11,510 நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் எவரும் தற்போதும் பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது, என்எல்சி-க்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஏற்கெனவே, 2-ம் சுரங்கத்திற்காக நிலம் வழங்கியவர்கள், நிலத்தின் மதிப்பை உயர்த்தவும், நிரந்தர வேலை வழங்கக் கோரியும், என்எல்சி நிறுவனத்திடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். .
எனவே, இச்சட்டத்தைக் கருத்திற்கொண்டு, நிர்வாகம், நில உரிமையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு உயர் அ காரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும், இதற்கான முழு முயற்சிகளையும் இந்த தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.