எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமிர்தசரஸ், மே. 4 - சரப்ஜித்சிங்கின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ. ஒரு கோடியும் மத்திய அரசு ரூ.25 லட்சமும் நிதி உதவி அளித்துள்ளது. பஞ்சாபில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித் சிங் உடல் நேற்று முன்தினம் மாலை லாகூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூரில் இருந்து இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டது. சரப்ஜித் சிங்கை உடலை பெற்றுக்கொள்ள அங்குள்ள ராஜசன்சி விமான நிலையத்துக்கு பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் யாதவ், அமைச்சர்கள், மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் ப்ரநீத் கெளர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அங்கிருந்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்த பின்னர் அவரது சொந்த கிராமமான பிகிவிண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுர்,மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வால்,தேசிய சிறுபான்மை கமிஷன் துணைத்தலைவர் ராஜ் குமார் வெர்கா, பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா தலைவர் கமல் சர்மா மற்றும் சிரோண்மணி அகாலிதளம், பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது ஊடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்தச்செல்லப்பட்டு அவரது உடலுக்கு காவல் துறையினர் துப்பாக்கியை தலைகீழாக பிடித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். அதனையடுத்து சரப்ஜித் சிங் உடலுக்கு மனைவி சுஹ்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வபன்தீப்,பூணம், மருமகன் சஞ்சய் ஆகியோர் முன்னிலையில் மூத்த சகோதரி தல்பீர் கவுர் சிதைக்கு தீ மூட்டினர். கவுருக்கு சிரோண்மனி அகாலிதளம் கட்சி எம்.எல்.ஏ.வீர்சா சிங் வல்டோஹா அருகில் இருந்து உதவிகளை செய்தார். சிதைக்கு தீ மூட்டுவதற்கு முன்பு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கை பார்க்க மக்கள் தெருக்களில் ஏராளமானோர் கூடியிருந்தனர். வீடுகள் மற்றும் மரங்களில் ஏறியும் பலர் பார்த்து கண்ணீர் மல்கினர்.
பஞ்சாப் மாநில அரசு சரப்ஜித் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி அறிவித்ததுடன் மூன்று நாள் அரசு முறைத் துக்கம் அனுஷ்டிக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு மத்திய அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரப்ஜித்சிங்கிற்கு சுப்ரீத்கவுர் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவரது மகள்கள் இருவருக்கும் உரிய அரசு வேலை கொடுக்கப்படும் என்று பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். இவர்களில் மூத்தவரான சுபபந்த்கவுருக்கு ஜலந்தரை சேர்ந்த சஞ்சய் என்ற வாலிபருடன் திருமணமாகி விட்டது. இளையவரான பூணத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. சரப்ஜித்சிங்கை மீட்க நடந்த எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் அவர் குடும்பத்தினர் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர் திடீரென கொல்லப்பட்டு விட்டார். அஜ்மல் கசாப், அப்சல்குரு ஆகிய இருவரையும் இந்தியா தூக்கில் போட்டதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் உளவுதுறையான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு சரப்ஜித்சிங்கை கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.


