எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதன்படி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அரை சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்படும் நிலையில், அந்த ஓவரை டிம் சவுதி வீசினார். அதில் முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் வந்த நிலையில், கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தார். மிட்செல் மார்ஷ் 72 (44 பந்துகள்) ரன்களுடனும், டிம் டேவிட் 31 (10 பந்துகள்) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சான்ட்னர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டோனியை பார்க்க வேண்டும்: துருவ்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் அறிமுகம் ஆன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் எதிர்வரும் 23-ம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் டோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரில் விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள துருவ் ஜூரேல் கூறுகையில்;- 'நான் டோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் ஏற்கனவே டோனியை பார்த்திருந்தாலும் இம்முறை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அவரை பார்க்கப் போகிறேன். என்னுடைய கனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் அவரை பார்க்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
சர்பராஸ்கான் குறித்து கங்குலி
இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பாண்ட்யாவின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடினால் இந்தியாவுக்காக விளையாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சர்பராஸ் கான் அறிமுகமாகி அசத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவிப்பதில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கங்குலி. சர்பராஸ் கான் தன்னுடைய கெரியரை நேர்மறையாக துவங்கியுள்ளார். ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில்தான் அவருக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கும். எனவே அவர் இந்திய துணை கண்டத்திற்கு வெளியே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
கோலி - அனுஷ்கா தம்பதிக்கு குழந்தை
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர், விராட் கோலி. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் 2017ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திருமணம் நடைப்பெற்றது. அனுஷ்கா ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இவர்கள் வாமிகா என பெயரிட்டனர். பிறந்து சில வருடங்கள் வரை தங்களின் குழந்தையின் புகைப்படத்தை எங்குமே பதிவிடாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வரைதான் இவர்கள் தங்களின் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தனர்.
தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு மேலும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அனுஷ்கா ஷர்மா, தனது கணவர் பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். இருவரும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களையும் அடிக்கடி சந்திப்பர். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுஷ்கா கேம்ராவின் கண்களில் படாமல் இருந்தார்.
கம்பேக் கொடுக்கும் சேவாக்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் போன்று எஸ்ஏ20 லீக், கரீபியன் டி20 லீக், அமெரிக்கன் பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், அமெரிக்கன் டி20 சாம்பியன்ஷிப் என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தான் இந்திய மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முதல் முறையாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்திய வெட்டரன் பிரீமியர் லீக் எனப்படும் ஐவிபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், ஹெர்செல் கிப்ஸ் ஆகியோர் உள்பட முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் விவிஐபி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் லெஜெண்ட்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, சட்டீஸ்கர் வாரியர்ஸ், தெலங்கானா டைகர்ஸ் மற்றும் மும்பை சாம்பியன்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
ஜெய்ஸ்வால் குறித்து நாசர் உசேன்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார். டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது., அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும். அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன். இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.
குரோசிய வீராங்கனை சாம்பியன்
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அரினா சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி நாளை திறந்து வைக்கிறார்
28 Dec 2025கோவை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (30-ம் தேதி) திறந்து வைக்கிறார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
28 Dec 2025சென்னை, சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக போராட்டம் - வன்முறை போலீஸார் காயம்; வாகனங்கள் எரிப்பு
28 Dec 2025ராய்கர், சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தின் தாம்னார் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.



