எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூலை 3 - என்.எல்.சி பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். என்.எல்.சி யின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பங்குகளை விற்றால் அதை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் என்.எல்.சிபங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து நேற்று (2-ம் தேதி) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் மதுரை மாநகர்,புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன்,புறநகர் மாவட்ட அவைத் தலைவர் சி.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன்,எம்.வி.கருப்பையா ஆகியோர் வரவேற்று பேசினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில சிறு பான்மையினர் நல பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் கலந்து கொண்டு தலைமை வகித்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் முதல்வர் அம்மா பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.ஆனால் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட சட்ட ரீதியாக போராடி வெற்றி கண்டு வருகிறார் முதல்வர் அம்மா.ஆனால் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு அனைத்து தரப்பிலும் எதிராகவே செயல்படுகிறது.நெய்வேலி சுரங்க விவகாரத்தில் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.அப்படி விற்பதாக இருந்தால் இதனை தமிழக அரசு வாங்கி கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் அம்மா அறிவித்த பிறகும் மத்திய அரசு மவுனம் காட்டி வருகிறது. மத்திய அரசு உடனடியாக தனது மவுனத்தை கலைத்து முதல்வர் அம்மாவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசிடம் 5 சதவீத பங்குகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடி வரும் அம்மாவிற்கு தமிழக மக்கள் துணை நின்று 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமோக வெற்றியை தேடித் தர வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஜாதி,மதம், பார்க்காமல் அனைவரும் ஒன்று பட்டு முதல்வர் அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப அதனை அ.தி.மு.க வினர் திரும்ப சொல்லி முழங்கிய கோஷங்கள் வின்னை முட்டியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.பி.முத்துமணி, முன்னாள் எம்.எல்.ஏ வி.ஆர்.ராஜாங்கம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல்,கே.ராஜாபாண்டியன், அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன்,கா.டேவிட் அண்ணாத்துரை,ஷ.ராஜலிங்கம்,பெ.இந்திராணி,ஏ,ராஜீவ்காந்தி,தமிழ்செல்வன், டி.வினோத்குமார், புதூர் சுந்தரா, தொகுதி கழக செயலாளர்கள் மா,இளங்கோவன்,கோ.பாரி, எஸ்.முருகேசன், எம்.ரவிச்சந்திரன், பகுதி கழக செயலாளர்கள் எம்.என்.முருகன், வி.கே.எஸ். மாரிச்சாமி, முத்திருளாண்டி,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்அண்ணாநகர் முனியசாமி, சண்முகவள்ளி, எல்லீஸ் நகர் ஏ.இந்திரா, கவுன்சிலர்கள் புதூர் ஐ.அபுதாகீர், பூமிபாலகன், எம்.கேசவபாண்டியம்மாள், கு.திரவியம், முத்துக்கருப்பன், கார்னர் பாஸ்கர், வீரணன், கண்ணகி பாஸ்கரன், ராணி போஸ்,குமுதா, பாகச் செயலாளர்கள் யுகா ராஜா, பாஸ்கரன், கோட்டைச்சாமி, மற்றும் வழக்கறிஞர் ரமேஷ்,நிலையூர் முருகன், மின்வாரியம் கெளதமன்,மிசா செந்தில், ஆட்டோ விஜயன், பார்த்திபன், விசுவலிங்கம், மகளிரணி தெய்வம் கணபதி, தேனம்மாள், எம்.கல்யாணி, புஷ்பா, எல்டா பாஸ்டின், சுகுணா, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்


