எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் பத்திரிகையாளர்களை சந்திக்க வரும்போதெல்லாம் விராட் கோலி குறித்து என்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது. விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஐபிஎல் தொடரிலிருந்தே அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஓரிரு முறை ஆட்டமிழந்தது பெரிய அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார். அவரிடமிருந்த பல சிறந்த இன்னிங்ஸ்களை நாம் பார்த்துள்ளோம் என்றார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோகித், கோலியின் எதிர்காலம் ?
முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், லீக் சுற்றில் எடுத்த ஸ்கோர்கள் பெரிதாக பேசப்படாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களது பரந்த அனுபவத்தின் காரணமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முக்கியமான போட்டிகளில் அவர்களது அனுபவம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும். அதனால், அவர்கள் ஃபார்மில் இல்லாமலிருப்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்பது இந்திய அணித் தேர்வுக் குழுவிடமும், சம்பந்தப்பட்ட வீரர்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கிடையில், நமக்கு நிறைய நாள்கள் இருக்கின்றன என்றார்.
வங்கதேசமா - நெதர்லாந்தா?
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தானும், மேற்கிந்தியத் தீவுகளும் தகுதி பெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குரூப் டி பிரிவில் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டன. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் வங்கதேசமும், நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசதம் அதன் கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நேபாளத்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்து இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து தோல்வியடைந்தாலும், வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற நல்ல நெட் ரன் ரேட்டில் இலங்கை அணியை வெற்றி பெற வேண்டும். அதேசமயம், வங்கதேச அணியும் நேபாளத்திடம் தோல்வியடைய வேண்டும். இந்த இரண்டும் நடைபெறும் பட்சத்தில், நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.
ஐ.சி.சி. மீது கடும் விமர்சனம்
தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐ.சி.சி.-யை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது., மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐ.சி.சி. போட்டியை நடத்தக் கூடாது. நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது என்று கூறினார்.
அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு., மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.
23-வது நொடியில் முதல் கோல்
ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார்.
இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது : மாமல்லபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
28 Oct 2025சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.


