எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்துள்ளார். இந்த குழுவில் கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரங்களை சேகரித்து அதில் 'வீக்கான' தொகுதிகளையும் பட்டியல் எடுத்து வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்ட சபை தொகுதி வாரியாக தி.மு.க.வினரை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து விசாரித்து வருகிறார். தொகுதியை மேலும் வலுவாக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுவரை 70 தொகுதிகளுக்கும் அதிகமாக ஆய்வு செய்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு (பி.எல்.ஏ.2) தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட மண்டல அளவில் பொறுப்பாளர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி சென்னைக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்கள் பாக முகவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இப்போது 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பயிற்சி கூட்டத்தை மாமல்லபுரத்தில் 28-ம் தேதி நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த பயிற்சி கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகரப் பகுதி பேரூர் கழக செயலாளர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னின்று செய்து வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 1 month ago | 
-   
          அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 
-   
          தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
-   
          வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
-   
          குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார். 
-   
          அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
-   
          சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார். 
-   
          சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித் 
-   
          தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது. 
-   
          தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. 
-   
          பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
-   
          ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
-   
          அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
-   
          டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
-   
          பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார். 
-   
          ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
-   
          தாய்லாந்து ராணி காலமானார்25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 
-   
          இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். 
-   
          பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
-   
          சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது. 
-   
          விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார். 
-   
          டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 
-   
          மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 
-   
          கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி 
-   
          நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
-   
          சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ. 
























































