எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார். அவர் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவார்? என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜோதிடர் ஒருவரை அழைத்து விராட் கோலியின் எதிர்காலம் குறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த ஜோதிடர் கூறுகையில் : சமீப காலமாகவே என்னிடம் விராட் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான் : மக்கள் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். என்னை பொறுத்தவரை விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கும். இனிவரும் சில ஆண்டுகள்தான் விராட் கோலி தனது உச்சகட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதனால் நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்களது நட்சத்திர வீரர் அசத்துவார்" என்று கூறினார்.
____________________________________________________________________________________________
அல்ஜாரி ஜோசப் விளையாட தடை
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒவர் முடிந்த பின் ஜோசப் மைதானத்தைவிட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.
அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்றுவீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால், பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல், மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
____________________________________________________________________________________________
சாதனையை நழுவ விட்ட ரிஸ்வான்
அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்த பாகிஸ்தான் அற்புதமான வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை 35 ஓவர்களில் 163 ரன்களுக்குச் சுருட்டியது. இதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் இரண்டாவது முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கைக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டினால் கடந்த மெல்போர்ன் போட்டியில் நெருக்கமாகத் தோற்றதற்குப் பதிலடி கொடுத்து தொடரில் சமநிலையை பாகிஸ்தான் எய்த முடியும். பாகிஸ்தான் கேப்டனும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான், 6 கேட்ச்களை எடுத்து ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், டி காக், சர்பராஸ் அகமது உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கூடுதலாக ஒரு கேட்சைப் பிடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்தவர் என்ற புதிய விக்கெட் கீப்பிங் உலக சாதனை புரிந்திருப்பார் ரிஸ்வான். அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், ஆடம் ஜாம்பா கொடுத்த கேட்சை நழுவ விட்டதால் உலக சாதனை வாய்ப்பைக் கோட்டை விட்டார் ரிஸ்வான்.
____________________________________________________________________________________________
ஆப்கானிஸ்தான் வீரர் ஓய்வு
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் முகமது நபி (வயது 39). இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக தற்போது வரை 3 டெஸ்ட், 165 ஒருநாள் மற்றும் 128 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முகமது நபி ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் நபி தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் கூறியதாவது, ஆமாம், நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு இதை எங்களிடம் தெரிவித்தார். டி20யில் அவர் விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
____________________________________________________________________________________________
தந்தையானார் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா டேவிட்டுக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான டிராவிஸ் ஹெட் மற்றும் ஜெஸ்ஸிகா டேவிட் ஹெட் தம்பதிக்கு கடந்த திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஹாரிஸன் ஜார்ஜ் ஹெட் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு மிலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜெஸ்ஸிகா டேவிட்டை டிராவிஸ் ஹெட் திருமணம் செய்துகொண்டார். டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹெட் பிக்-பாஸ் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஹெட் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்
07 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட, ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
07 Dec 2025விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர்
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.


