எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 121-வது அத்தியாத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ‘சசேத்’ என்ற மொபைல் செயலி குறித்து குறிப்பிட்டிருந்தார்.
“நண்பர்களே, இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காப்பாற்றுகிறது, இதன் பெயரும் கூட சசேத். சசேத் செயலியை, இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
இந்தச் செயலியால் நீங்கள் வானிலை ஆய்வுத் துறைசார் அண்மைத் தகவல்களைப் பெறலாம். குறிப்பாக, இந்த சசேத் செயலி, மாநில மொழிகளிலும் கூட பல தகவல்களை அளிக்கிறது. இந்தச் செயலியால் நீங்களும் பயனடையுங்கள், உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
சசேத் செயலி பேரிடர் பாதிப்பு குறித்த முன்னறிவுப்புகளை இந்த செயலி வழங்கும். இந்த தகவல் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இதோடு வானிலை சார்ந்த அறிவிப்புகளை இந்திய வானிலை மையத்தின் துணையோடு இந்த செயலியில் பயனர்கள் பெற முடியும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். (தமிழில் நாம் பயன்படுத்தி பார்த்தபோது அது அப்படியே ஆங்கிலத்தில் இருந்து நேராக இணையம் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது போல இருந்தது. ஹோம் பேஜ் என்பது தமிழில் ‘வீடு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அது முகப்பு என்று இருக்க வேண்டும்). இதில் அவசர கால உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


