எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் விபரம் வருமாறு;
1. ஈரோட்டில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற கழகத்தின் 31 ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
3. வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசின் நீர்வளத் துறை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க , வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
4. இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
5. அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்துவது என கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜூலை 17ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கும் மண்டல வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும் என்று கழக நிர்வாக குழுத் தீர்மானிக்கிறது.
6. தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 days ago |
-
புதுச்சேரி பா.ஜ.க. தலைவராகிறார் ராமலிங்கம்: முறைப்படி இன்று அறிவிப்பு வெளியாகிறது
29 Jun 2025புதுச்சேரி : முன்னாள் நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
-
9.5 பவுன் நகை மாயமான சம்பவம்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 6 போலீசார் சஸ்பெண்ட்
29 Jun 2025திருப்புவனம் : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி.
-
ஏலகிரி மலையில் கோடை விழா: 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
29 Jun 2025திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு விழா,இரா.இராஜேந்திரன் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-06-2025.
29 Jun 2025 -
அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
29 Jun 2025வாஷிங்டன் : திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, அமெரிக்கா சென்ற 24 வயது இளம்பெண் மாயமானது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
29 Jun 2025திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
கூட்டணி குறித்து இ.பி.எஸ். தெளிவுபடுத்த வேண்டும் : திருமாவளவன் பேட்டி
29 Jun 2025குன்னம் : கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
-
செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
29 Jun 2025சென்னை : உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ
-
பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
29 Jun 2025கோவை : பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
29 Jun 2025சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழக
-
போலீசாரால் மட்டுமே பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது : மத்திய பிரதேச டி.ஜி.பி., சொல்கிறார்
29 Jun 2025போபால் : '' மொபைல்போன் மற்றும் இணைய சேவை பயன்பாடு அதிகரிப்பால், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
-
பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அமைச்சர் தேனீர் விருந்து
29 Jun 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
29 Jun 2025திருச்சி : திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்
-
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
29 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
10 ஆண்டுகள் நிறைவு: சென்னை மெட்ரோவில் இதுவரை 39 கோடி பேர் பயணம்
29 Jun 2025சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
-
ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலி: மன்னிப்பு கோரிய முதல்வர் மாஞ்சி
29 Jun 2025புவனேஸ்வர் : ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு ஒடிசா முதல்வர் மாஞ்சி மன்னிப்பு கோரியுள்ளார்.
-
விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
29 Jun 2025மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
-
மதச்சார்பின்மை வார்த்தை நீக்கம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்துக்கு துணை ஜனாதிபதி தன்கர் ஆதரவு
29 Jun 2025புதுடில்லி : இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.
-
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி; 7 பேர் மாயம்
29 Jun 2025டேராடூன் : உத்தரகாண்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Jun 2025சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வத
-
ரஷ்யா வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு: உக்ரைன்
29 Jun 2025கீவ் : ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின் போது உக்ரைன் விமானி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எப்-16 போர் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும் கீவ் ராணுவம் தெரிவித்துள்
-
போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும்: ஈரானுக்கு ஜெய்சங்கர் அறிவுறுத்தல்
29 Jun 2025புதுடில்லி : போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு
29 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
-
தவறான சமூக ஊடக பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் : நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
29 Jun 2025திண்டிவனம் : சமூக ஊடகங்களில் நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
ராணுவத்தினர் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
29 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ