எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இலங்கை : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ரணில் விக்ரமசிங்க நேற்று(சனிக்கிழமை) சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அரசியலில் இருப்பவர்கள் வழக்குகளை எதிர்கொள்வது சாதாரணமானதுதான். ரணில் அதனை எதிர்கொள்வார். அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதெல்லாம் அரசியலின் ஒரு பகுதி. அவருக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. சிறிய தவறுக்காக அவர் சிறையில் இருப்பதற்கு வருத்தம் அளிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறில்லை. மக்கள் அரசின் நடவடிக்கைகளை சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் அரசியல் தலைவர்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்களும் எங்களை நேசிக்கிறார்கள்" என்று பேசினார்.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா உள்ளிட்ட பலரும் விக்ரமசிங்கவைச் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
ரணில் விக்ரமசிங்க கைது
ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது 2023 செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதற்காக இலங்கை அரசின் நிதியில் இருந்து ரூ. 1.7 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிதியில் லண்டன் சென்ற ரணில் விக்ரமசிங்க உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் கொழும்புவில் சிஐடி(CID) அதிகாரிகள் முன்பு நேற்று(ஆக. 22) ஆஜராக, அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து உடனடியாக ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தின் முப்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையான வெலிக்கடை சிறைச்சாலையில் ரணில் விக்ரமசிங்க அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து போலீசார் அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் விவகாரம்: நயினார் நாகேந்திரன்
23 Aug 2025சென்னை : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்
23 Aug 2025காலி : கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் கைதுக்கு ராஜபக்ச கண்டனம்
23 Aug 2025இலங்கை : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம்: வரும் செப். 1 முதல் தொடக்கம்
23 Aug 2025சென்னை : அ.தி.மு.க.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
வருடாந்திர உச்சி மாநாடு: பிரதமர் மோடி 29- தேதி ஜப்பான்-சீனா பயணம்
23 Aug 2025புதுடெல்லி, பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை வருகிற 29-ந்தேதி தொடங்குகிறார்.
-
தூய்மை பணியாளர் பலி: 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும்: அமைச்சர் தகவல்
23 Aug 2025சென்னை, உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்க்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
அனில் அம்பானி இடங்களில் சோதனை
23 Aug 2025புதுடெல்லி, பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
எஸ்.சுதாகர் ரெட்டி மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
23 Aug 2025சென்னை : எஸ்.சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்,
-
நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் : ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
23 Aug 2025டெல் அவிவ் : காசா நகரை முற்றுகையிட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி வழங்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து பாதுகாப்பு அ
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
அமெரிக்காவில் விபத்து: 5 இந்தியர்கள் காயம்
23 Aug 2025நியூயார்க் : அமெரிக்காவில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
23 Aug 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
-
அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாக தி.மு.க. மாடல் அரசு உள்ளது: சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Aug 2025சென்னை, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ நியமனம்
23 Aug 2025நியூயார்க் : இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி.
-
உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம-தேடும் பணி தீவிரம்
23 Aug 2025உத்தரகாண்ட் : உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியு
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: செப்டம்பர் 24 வரை நீட்டிப்பு
23 Aug 2025புது டெல்லி, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.