எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: பிரதமரின் 900 மின்சார பஸ்களை ஏற்க மறுத்தது ஏன் என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் ‘பி.எம் மின்சார டிரைவ்’ மற்றும் பி.எம். மின்சார பஸ் சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சார பஸ் சேவை திட்டம் 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசு ரூ.57 ஆயிரத்து 613 கோடி ஒதுக்கியது. 2 பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக 10 ஆயிரம் மின்சார பஸ்கள் 169 நகரங்களில் இயக்கப்படும்.
40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் தொகை நகரங்களுக்கு தலா 150 பஸ்களும், 5 லட்சம் முதல் 20 லட்சத்திற்கு தலா 100 பஸ்களும், 5 லட்சத்திற்கு கீழ் உள்ள நகரங்களுக்கு தலா 50 பஸ்களும் வழங்கப்படும்.
இந்த மின்சார பஸ்களை நிதி கொடுத்து வாங்கி பராமரித்து இயக்கும் பொறுப்பு தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. டெண்டர் மூலம் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2037-ம் ஆண்டு வரை அவர்கள் அந்த பஸ்களை இயக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் என்ற அடிப்படையில் அந்த பஸ்கள் இயக்கப்படும் தூரத்திற்கு மத்திய அரசு பணம் வழங்கி விடும். அதே நேரத்தில் டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சார்ஜிங் நிலையம் அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இருந்தாலும், அதற்கான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 293 பஸ்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் 6,518 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.437 கோடி விடுவித்துள்ளது.
மத்திய அரசு, இந்த பஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 நகரங்களை தேர்வு செய்துள்ளது. அந்த அடிப்படையில் கோவைக்கு 150 மின்சார பஸ்கள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவற்றுக்கு தலா 100 பஸ்களும், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவற்றுக்கு தலா 50 பஸ்களும் என மொத்தம் 900 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு, பிரதமரின் இந்த மின்சார பஸ்களை தங்களது மாநிலத்திற்கு வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறும் போது, பிரதமர் மின்சார பஸ்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 9 சதவீத பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழக அரசுக்கு இந்த திட்டத்தின் கீழ் பஸ்கள் பெற விருப்பம் இல்லாததால் அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றார். இந்த நிலையில், இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தினால் நிதி சரியாக வராது. பெயர்கள் மட்டும் அவர்களுடையதாக இருக்கும். எனவே தான் தமிழக அரசு சுயமாகவே மின்சார பஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
04 Sep 2025சென்னை, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்குமோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈட
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள்: சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு
04 Sep 2025மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனை நடவடிக்கை எடுத்துள்ளதையடுத்து சைபர் க்ரைம் போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.