எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
_______________________________________________________________________________________
கிரிக்கெட் ரசிகன்: உசேன் போல்ட்
ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
மும்பையில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
_______________________________________________________________________________________
ஆஸி. மகளிரணி கேப்டன் கோரிக்கை
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி இந்திய ரசிகர்களை சிஎஸ்கேவின் ஜெர்ஸியை அணிந்து வருமாறு கூறியது வைரலாகி வருகிறது. மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் செப்.30 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன. ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி. மகளிரணி ஏழு முறை வென்று வரலாறு படைக்க, இந்திய மகளிரணி ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸி. மகளிரணி கேப்டன் அலீஸா ஹீலி பேசியதாவது: மஞ்சள் நிறமாக தோனியின் சிஎஸ்கே ஜெர்ஸியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்கு பிடிக்கும். அது மிகவும் சிறப்பாக இருக்கும். கூட்டத்தில் மஞ்சள் நிறமும் இருந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான அணியாக எங்களை முத்திரைக் குத்தியுள்ளீர்கள். அதற்கு நன்றி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இதுவரை விளையாடியதிலேயே மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருக்கும். இங்கு நல்ல ஆதரவும் ஒன்றில் மிகையான மனநிறைவும் கிடைக்கிறது என்றார்.
_______________________________________________________________________________________
வரலாறு படைத்த இலங்கை வீரர்
ஆசிய கோப்பையில் இலங்கை வீரர் பதும் நிசங்கா கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தனது முதல் டி20 சதத்தை ஆசிய கோப்பையில் அடித்த நிசங்கா பலவேறு சாதனைகளைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். ஆசிய கோப்பை சூப்பர் 4-இல் கடைசி போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 202/ 5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இலங்கை அணியும் 202/5 எடுத்து போட்டி டிரா ஆனது. சூப்பர் ஓவரில் இந்திய அணி எளிதாக வென்றது.
இதில், இலங்கை வீரர் பதும் நிசங்கா 58 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். இதுவரையிலான ஆசிய கோப்பை டி20-யில் அதிகமான ரன்களை குவித்தவராக நிசங்கா வரலாறு படைத்துள்ளார். ஆசிய கோப்பை டி20-யில் அதிக ரன்கள் வருமாறு., 1. பதும் நிசங்கா - 434 ரன்கள், 2. விராட் கோலி - 429 ரன்கள், 3. அபிஷேக் சர்மா - 309 ரன்கள், 4. பாபர் அயாத் - 292 ரன்கள், 5. முகமது ரிஸ்வான் - 281 ரன்கள்.
_______________________________________________________________________________________
அபிஷேக் சர்மாவுக்கு பாராட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றில் துபையில் (செப்டம்பர் 26) நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிப்பதாகவும், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதனை இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிக்கிறது. அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதற்கு அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஆகும். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரால் மெதுவாகவும் விளையாட முடிகிறது. அதனால், நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றங்களை கண்டு வருகிறார் என்றார்.
_______________________________________________________________________________________
ஹாரி கேன் புதிய சாதனை
இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் (32 வயது) கிளப் கால்பந்து போட்டிகளில் அதிவேகமாக 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலண்ட் அடித்ததை விட குறைவான போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜெர்மனியின் புன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் எஃப்சி பெயர்ன் மியூனிக் அணியும் வெர்டர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ஹாரி கேன் 45 (பெனால்டி), 65ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்த, இறுதியில் 4-0 என பெயர்ன் மியூனிக் வென்றது. இத்துடன் ஹாரி கேன் பெயர்ன் மியூனிக் அணிக்காக 100 கோல்களை 104 போட்டிகளில் நிறைவு செய்துள்ளார். ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து கிளப் போட்டிகளில் இவர்தான் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Sep 2025ராமேசுவரம் : பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உலகிலேயே போக்குவரத்து நெரிசல்: பெங்களூருக்கு 3-வது இடம்
27 Sep 2025பெங்களூர் : போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2025.
27 Sep 2025 -
பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாகிறது..? தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
27 Sep 2025பாட்னா, பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
அறத்தை கற்றுக்கொள்ள வேண்டும்: சீமானுக்கு இ.பி.எஸ். கண்டனம்
27 Sep 2025சென்னை, அண்ணா, எம்.ஜி.ஆரை இழிச்சொல் உரைத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் 2-வது நாளாக அமித்ஷா ஆலோசனை
27 Sep 2025பீகார் : பீகாரில் 2-வது நாளாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.
-
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்
27 Sep 2025சென்னை : சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்
27 Sep 2025வடமேற்கு : வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
நாமக்கலில் விஜய் பிரசாரத்தின் போது நுழைந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்ட தொண்டர்கள்
27 Sep 2025நாமக்கல் : நாமக்கலில் விஜய் பிரசார கூட்டத்தில் நுழைந்த ஆம்புலன்சுக்கு தொண்டர்கள் வழிவிட்டனர்.
-
போர் முடிந்த பிறகு பதவி விலகல்: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி இல்லை: ஸெலென்ஸ்கி அறிவிப்பு
27 Sep 2025உக்ரைன் : அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறிதது உக்ரைன் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் புதிதாக ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
27 Sep 2025சென்னை : 2021-ல் தி.மு.க.
-
வார இறுதி நாளில் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
27 Sep 2025சென்னை, வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
-
நாடு முழுவதும் 100 சதவீத பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி : கிராமங்கள் பயன்பெறும் என பெருமிதம்
27 Sep 2025புவனேஸ்வர் : நாடுமுழுவதும் 100 சதவீத மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
27 Sep 2025ஒகேனக்கல் : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 645 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது : 1905 தேர்வு மையங்களில் 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
27 Sep 2025சென்னை : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 645 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.
-
தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
27 Sep 2025டெல்லி : தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
-
அதிபர் ட்ரம்புக்கு எதிராக கருத்து: கொலம்பியா அதிபரின் அமெரிக்கா விசா ரத்து
27 Sep 2025வாஷிங்டன் : கொலம்பியா அதிபரின் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
-
லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு
27 Sep 2025லடாக் : லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
-
மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளவை சேர்ந்த 11 மாணவர்கள் கைது
27 Sep 2025மங்களூரு : மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 727 கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
27 Sep 2025சென்னை : குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
ஐதராபாதில் தொடர் கனமழை: 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
27 Sep 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
27 Sep 2025சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இ.பி.எப்.ஓ.
-
பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் கொடுக்க மாட்டோம்: நாமக்கல் பிரச்சாரத்தில்விஜய் உறுதி
27 Sep 2025நாமக்கல், நாமக்கல்லில் மக்களுடன் சந்திப்பு பெயரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,பொய்யான வாக்குறுதிகளை எப்பவும் கொடுக்க மாட்டோம் என உறுதிப்பட தெர
-
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் விரைந்தார்
27 Sep 2025கரூர், கரூரில் நேற்று த.வெ.க.
-
இலங்கைக்கு எதிரான ஆட்டம்: சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது
27 Sep 2025துபாய் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.