எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,பிப்.27 - வரும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஊமச்சிகுளத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மதுரை மாநகர் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எந்தவித ஆரவாரமும் ஆடம்பரமும் இல்லாமல் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அம்மா என்றால் கருணை, தர்மம் போன்றவையாகும். அரசியலுக்கு ஜெயலலிதா வருவதற்கு முன்பே ஏழை எளியோருக்கு உதவி செய்யும் கருணை உள்ளம் படைத்தவர். கலைத்துறையில் அவர் இருந்தபோதும் சீன யுத்தம் வந்தபோதும் ராணுவ யுத்த நிதிக்காக தான் அணிந்திருந்த நகைகளை அப்போது பிரதமராக இருந்தவரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ ஒரு குண்டூசியை கூட யாருக்கும் கொடுத்தது கிடையாது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வு இல்லாமல் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வழிநடத்திச் சென்று பொற்கால ஆட்சியை தந்தார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று கருணாநிதியின் கோரப்பிடியில் சிக்கி தமிழக மக்கள் நித்தம் நித்தம் மரண பயத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இவற்றையெல்லாம். கருணாநிதி கண்டுகொல்லாமல் கோடி கோடியாக ஊழல் செய்து கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் செய்து மத்திய அரசின் கஜானாவை காலியாக்கி கருணாநிதியின் கஜானாவுக்கு மாற்றியுள்ளார் மாஜி மந்திரி ஆ.ராசா. இதைப்பற்றி மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் போர்க்குரலால் இந்த ஊழல் மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின் இந்திய தலைமை கணக்கு அதிகாரி, உச்சநீதிமன்றம் கண்டித்ததின்பேரில் ராசா, வேறுவழியின்றி கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவர் கொள்ளையடித்த பணத்தை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கைப்பற்றவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது மிக விரைவில் நடைபெறும்.
தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த இலவச திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. அதிலும் இந்த இலவசங்கள் அனைத்தும் தி.மு.க.வினர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. வேறு எந்த முக்கிய திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் இன்று 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 15 ஆயிரம் கடன் சுமை உள்ளது. இதுதான் கருணாநிதியின் கபட ஆட்சியின் நிலையாகும். அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை எண்ண முடியாது. ஆற்று மணலை கூட எண்ணி விடலாம். கருணாநிதியின் குடும்பம் சுருட்டியுள்ள சொத்துக்களை எவ்வராலும் எண்ணி சொல்லிவிட முடியாது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தை கருணாநிதி குறுக்கு வழியில் கைப்பற்றி தன்னுடைய கடும்ப சொத்தாக்கிவிட்டார். இதனை நாட்டு மக்களும் அவரது தொண்டர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வரும் சட்டசபை தேர்தல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டும் தேர்தலாக அமையும். இந்த தேர்தலோடு கருணாநிதி நாட்டை விட்டே ஓடி விடுவார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று இன்றைக்கு மக்களே பேசி வருகிறார்கள். எனவே மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையில் புனித ஆட்சி மலர நாம் அனைவரும் அவரது பிறந்த நாளில் அயராது பாடுபட வேண்டும் என சூளூரை ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காசிமாயன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜி.கருப்பணன், மாணவரணி இணை செயலாளர் கே.பி.பூமிநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் கருணாமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் மலையாளம், வக்கீல் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி நாளை திறந்து வைக்கிறார்
28 Dec 2025கோவை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (30-ம் தேதி) திறந்து வைக்கிறார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
28 Dec 2025சென்னை, சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.



