எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,பிப்.27 - வரும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஊமச்சிகுளத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மதுரை மாநகர் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எந்தவித ஆரவாரமும் ஆடம்பரமும் இல்லாமல் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அம்மா என்றால் கருணை, தர்மம் போன்றவையாகும். அரசியலுக்கு ஜெயலலிதா வருவதற்கு முன்பே ஏழை எளியோருக்கு உதவி செய்யும் கருணை உள்ளம் படைத்தவர். கலைத்துறையில் அவர் இருந்தபோதும் சீன யுத்தம் வந்தபோதும் ராணுவ யுத்த நிதிக்காக தான் அணிந்திருந்த நகைகளை அப்போது பிரதமராக இருந்தவரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ ஒரு குண்டூசியை கூட யாருக்கும் கொடுத்தது கிடையாது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வு இல்லாமல் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வழிநடத்திச் சென்று பொற்கால ஆட்சியை தந்தார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று கருணாநிதியின் கோரப்பிடியில் சிக்கி தமிழக மக்கள் நித்தம் நித்தம் மரண பயத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இவற்றையெல்லாம். கருணாநிதி கண்டுகொல்லாமல் கோடி கோடியாக ஊழல் செய்து கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் செய்து மத்திய அரசின் கஜானாவை காலியாக்கி கருணாநிதியின் கஜானாவுக்கு மாற்றியுள்ளார் மாஜி மந்திரி ஆ.ராசா. இதைப்பற்றி மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் போர்க்குரலால் இந்த ஊழல் மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின் இந்திய தலைமை கணக்கு அதிகாரி, உச்சநீதிமன்றம் கண்டித்ததின்பேரில் ராசா, வேறுவழியின்றி கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவர் கொள்ளையடித்த பணத்தை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கைப்பற்றவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது மிக விரைவில் நடைபெறும்.
தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த இலவச திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. அதிலும் இந்த இலவசங்கள் அனைத்தும் தி.மு.க.வினர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. வேறு எந்த முக்கிய திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் இன்று 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 15 ஆயிரம் கடன் சுமை உள்ளது. இதுதான் கருணாநிதியின் கபட ஆட்சியின் நிலையாகும். அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை எண்ண முடியாது. ஆற்று மணலை கூட எண்ணி விடலாம். கருணாநிதியின் குடும்பம் சுருட்டியுள்ள சொத்துக்களை எவ்வராலும் எண்ணி சொல்லிவிட முடியாது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தை கருணாநிதி குறுக்கு வழியில் கைப்பற்றி தன்னுடைய கடும்ப சொத்தாக்கிவிட்டார். இதனை நாட்டு மக்களும் அவரது தொண்டர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வரும் சட்டசபை தேர்தல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டும் தேர்தலாக அமையும். இந்த தேர்தலோடு கருணாநிதி நாட்டை விட்டே ஓடி விடுவார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று இன்றைக்கு மக்களே பேசி வருகிறார்கள். எனவே மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையில் புனித ஆட்சி மலர நாம் அனைவரும் அவரது பிறந்த நாளில் அயராது பாடுபட வேண்டும் என சூளூரை ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காசிமாயன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜி.கருப்பணன், மாணவரணி இணை செயலாளர் கே.பி.பூமிநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் கருணாமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் மலையாளம், வக்கீல் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.