எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஜூன்.18 - மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க லஞ்சம் பெற்றதாக மதுரை தி.மு.க. மேயர்தேன்மொழி ,மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஊழல், வன்முறை, கொள்ளை, கொலை , அரசு நிலங்கள்,தனியார் நிலங்கள் ஆக்கிரமிப்பு சமூக விரோத செயல்கள் தலைவிரித்தாடியது. உள்ளாட்சிகளில் திமுக வெற்றி இடங்களில் திமுகவினர் கடை ஏலம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். திமுகவின் உச்சக்கட்ட ஊழலான ஸ்பெக்டரம் வழக்கில் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் எதிரொலியாக திமுகவினரின் பல்வேறு ஊழல்களை பாதிக்கப்பட்டவர்கள் புகார் மூலம் வெளி கொண்டுவர துவங்கி உள்ளனர்.
ஏமதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, மதுரை மாநகராட்சி 9வது வார்டு மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு பின்புறம் உள்ள காலியிடத்தை ஆக்கிரமித்து மதிச்சியத்தில் இருக்கும் சுந்தர்ராஜன் மனைவி ரங்கம்மாள் கட்டிடம் கட்டி வந்தார். இது குறித்து மதுரை மேயர் தேன்மொழி, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தேன். அதன்பின் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுவிட்டதாக எனக்கு பொய்யான தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. நான் தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக கடந்த ஜனவரி 10 ம் தேதி மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே மேயர் ,கமிஷனர், காண்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளை ஆகியோர் கூறியதின் பேரில் சர்வேயர் குருசாமி கட்டிடம் கட்டும் ரங்கம்மாளிடம் லஞ்சமாக பணம் வாங்கினார் என்று தெரியவந்தது. இதற்கிடையே நான் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்த விவரம் தெரிந்த ஆக்கிரமிப்பாளர்கள் என்னுடன் போட்டி போட முடிவு செய்து, ஆக்கிரமித்தது போக மீதமிருந்த இடத்திலும் வீடுகட்டுவோம். அதற்கு தேவையான ஆவணங்களை போலியாக தயார் செய்வோம் என்று கூறினர். எனவே, அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யும் படி போலீசாருக்கு உத்தரவிடும் படி ஐகோர்ட் கிளை உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜேம்ஸ் டேவிட் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார். முடிவில் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை நடத்தி ஜூலை 15ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயர் தேன்மொழி, கமிஷனர் ஜெபாஸ்டின், நகர அமைப்பு அதிகாரி முருகேசன், உதவிக்கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள், காண்ட்ராக்டர் உட்பட 13 பேர் மீது 120(பி) கூட்டுச்சதி, 13(1பி), 13(2) ஆகிய லஞ்ச தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திமுக மேயர் தேன்மொழி மற்றும் கமிஷனர் செபாஸ்டினிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.