எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஜூலை.- 4 - பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதனால் விலைவாசிகள் உயர்ந்து ஏழை,எளிய மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுன்றத்தில் கொண்டுவரக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து சமாளிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. அதன்படி லோக்பால் மசோதாவுக்கான அம்சங்களை தயார் செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 5 பேர் அரசு பிரதிநிதிகளும் மீதி 5 பேர் சிவில் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். சிவில் பிரதிநிதிகள் அண்ணா ஹசாரே தலைமையில் செயல்பட்டனர். லோக்பால் மசோதாவுக்கு அம்சங்களை அரசு பிரதிநிதிகள் தனியாகவும் சிவில் பிரதிநிதிகள் தனியாகவும் உருவாக்கினர். லோக்பால் மசோதா அதிகாரத்தின்கீழ் பிரதமர், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களையும் கொண்டு வர வேண்டும் என்று சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அம்சங்கள் உருவாக்குவது தொடர்பாக சிவில் பிரதிநிதிகளும் அரசு பிரதிநிதிகள் 9 தடவை சந்தித்து பேசினர். அப்போதும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்காவிட்டால் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும் தாம் கூறும் கருத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுக்கும்படி எல்.கே.அத்வானி உள்பட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கல், அஜீத்சிங், நிதீஷ்குமார் உள்பட பல முக்கிய தலைவர்களை ஹசாரே சந்தித்து பேசினார். சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசினார்.
லோக்பால் மசோதாவில் அம்சங்கள் சேர்ப்பது குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே. அத்வானி ஆகியோர் உள்பட தலைவர்கள் பேசினர். பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தார். இந்த மசோதாவானது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஒரு மசோதாவாக இருக்கும். அரசு அமைப்புகளுடன் இணைக்கமாக செயல்படும் வகையிலும் இருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாரதிய ஜனதா தலைவர்கள் பேசுகையில் லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்கு கீழ் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருந்தபோது லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வலது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா, இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அ.தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் தம்பித்துரை, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். சிவில் உறுப்பினர் அண்ணாஹசாரேவும் கலந்துகொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.