எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை.- 4 - பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதனால் விலைவாசிகள் உயர்ந்து ஏழை,எளிய மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுன்றத்தில் கொண்டுவரக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து சமாளிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. அதன்படி லோக்பால் மசோதாவுக்கான அம்சங்களை தயார் செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 5 பேர் அரசு பிரதிநிதிகளும் மீதி 5 பேர் சிவில் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். சிவில் பிரதிநிதிகள் அண்ணா ஹசாரே தலைமையில் செயல்பட்டனர். லோக்பால் மசோதாவுக்கு அம்சங்களை அரசு பிரதிநிதிகள் தனியாகவும் சிவில் பிரதிநிதிகள் தனியாகவும் உருவாக்கினர். லோக்பால் மசோதா அதிகாரத்தின்கீழ் பிரதமர், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களையும் கொண்டு வர வேண்டும் என்று சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அம்சங்கள் உருவாக்குவது தொடர்பாக சிவில் பிரதிநிதிகளும் அரசு பிரதிநிதிகள் 9 தடவை சந்தித்து பேசினர். அப்போதும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்காவிட்டால் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும் தாம் கூறும் கருத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுக்கும்படி எல்.கே.அத்வானி உள்பட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கல், அஜீத்சிங், நிதீஷ்குமார் உள்பட பல முக்கிய தலைவர்களை ஹசாரே சந்தித்து பேசினார். சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசினார்.
லோக்பால் மசோதாவில் அம்சங்கள் சேர்ப்பது குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே. அத்வானி ஆகியோர் உள்பட தலைவர்கள் பேசினர். பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தார். இந்த மசோதாவானது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஒரு மசோதாவாக இருக்கும். அரசு அமைப்புகளுடன் இணைக்கமாக செயல்படும் வகையிலும் இருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாரதிய ஜனதா தலைவர்கள் பேசுகையில் லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்கு கீழ் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருந்தபோது லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வலது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா, இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அ.தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் தம்பித்துரை, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். சிவில் உறுப்பினர் அண்ணாஹசாரேவும் கலந்துகொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.


