எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 7 -2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரத்து 535 கோடியை மத்திய திட் டக்குழு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டக்குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.3 ஆயிரத்து 467 கோடி அதிகமாகும். இந்தநிதி ஒதுக்கீடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய திட்டக்குழு நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அந்தந்த மாநிலங்களின் திட்டங்களுக்கு தகுந்தவாறு மத்திய திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும். மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேற்று மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாண்டெக் சிங் அலுவாலியா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புதுடெல்லி சென்றார். டெல்லி சென்ற அவரை முன்னதாக தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாரங்கி மற்றும் உயரதிகாரிகள் சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் தம்பித்துறை மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து மத்திய திட்டக்குழு கூட்டத்திற்கு சென்றார். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஜெயலலிதா சென்றதும் அவருக்கு மாண்டக் சிங் அலுவாலியா பூச்செண்டு கொடுத்து அன்புடன் வரவேற்றார். மாண்டெக் சிங் அலுவாலியாவுடன் ஜெயலலிதா சிறிது நேரம் பேசினார். இந்த பேச்சுக்கு பின்னர் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் மாண்டக் சிங் அலுவாலியா மற்றும் அவரது துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுவிட்தாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து கொடுத்தல், மாநிலத்தில் சுகாதார வசதிகளை பெருக்கவும், வறுமையை ஒழிக்கவும் தமிழகத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். ஜெயலலிதா கூறிய நியாயமான திட்டங்களை ஆய்வு செய்த திட்டக்கமிஷன் ஜெயலலிதா கேட்டதை விட ரூ.535 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியது. அதாவது 2011-12-ம் ஆண்டுக்கான மொத்த திட்ட நிதி ரூ.23 ஆயிரத்து 535 கோடியை திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்த தொகையை விட ரூ. 3 ஆயிரத்து 535 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்த போதிலும் கருணாநிதியால் தமிழக திட்டங்களுக்கு இவ்வளவு அதிகமாக நிதியை கேட்டு பெற முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க. கட்சியானது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததோடு மத்திய அரசிலும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தும் ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால் கூடுதல் நிதி பெற்றுள்ளார்.
கூட்டம் முடிந்ததும் ஜெயலிலாதவை மாண்டெக் சிங் அலுவாலியா வாசல்படி வரை வந்து மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா திட்டக்குழுவின் நிதி ஒதுக்கீடு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிதி ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்பார்த்ததுதான். தமிழக அரசின் கடன் ரூ. ஒரு லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கிறது. இதை சமாளிக்க தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்டக்குழுவை நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசின் சில கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன் என்று ஜெயலலிதா மேலும் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாண்டக்சிங் அலுவாலியாவிடம் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாண்டக் சிங் அலுவாலியா, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேச்சு
16 Nov 2025சென்னை : வாக்காளர் தீவிர திருத்தத்தைஎதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.
-
டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு
16 Nov 2025டெல்லி : டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பயங்கரவாதம் குறித்த பேச்சு: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
16 Nov 2025உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதம் குறித்த பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமாரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்ப
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆா். பணி தொடர்பான அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
16 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் தி.மு.க.வை கண்டித்து அதி.மு.க. இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவ.30 வரை நீட்டிப்பு : தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
16 Nov 2025சென்னை : டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.


