எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் திம்மாம்பேட்டை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் டாக்டர்.கா.ப.கார்த்திகேயன், முன்னிலை வகித்தார்.வாணியம்பாடி வட்டாட்சியர் முரளி வரவேற்புரையாற்றினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேசியதாவது:- மனுநீதி நாள் முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அத்தகவல்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டத்திலும் உள் வட்டாரங்களில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இக்குறை தீர்ப்பு கூட்டங்களில் அதிகமாக முதியோர் ஓய்வூதியம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வேண்டி மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் தகுதியுடைய பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படுகிறது. இதே போல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. இவ்வளவு சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும் நம் மக்களிடையே இன்னும் அதிக குறைகள் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய மக்கள் தொகை அதிக அளவு இருப்பதே ஆகும். தற்போதுள்ள வறட்சியான நிலையில் மக்களின் முக்கியமான தேவை குடிநீர். உங்களுடைய பகுதியில் குடிநீர் போதுமான அளவு உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கேனும் குடிநீர் பிரச்சனை இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.. இவ்விழாவில் வருவாய்துறையின் மூலம் 114 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், சிறு குறு விவசாயி, வாரிசு, இருளர் சான்றிதழ்களையும், முதியோர் உதவித் தொகை போன்ற நிதியுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு சலவை பெட்டியும், வேளாண் துறையின் சார்பாக 8 பயனாளிகளுக்கு விதைப்பைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபருக்கு உதவித் தொகையும், பல்வேறு விபத்துகளில் பாதிப்படைந்த 25 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையும், சமூக நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு இலவச வீடுகளும், இந்திய ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கடனுதவி தொகையும் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் மூலம் 81 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 246 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்தி 92 ஆயிரம் 100ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், இணை இயக்குநர் (கால்நடை) மரு.அர்த்தனாரி, துணை இயக்குநர் (கால்நடை) மரு.மனோகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) டேவிட்ராஜா, உதவி இயக்குநர் (வேளாண்மை) சோமு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சந்தியா மகேஸ்வரி, துணை இயக்குநர் (நோய் தடுப்புத் துறை) மரு.தேவபார்த்தசாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை நிஷாந்தினி, இணை இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.முரளிதரன், வெங்கடேசன், திம்மாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி, தொடக்க கல்வித் துறை அலுவலர் சித்ரா, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மதிவாணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



