எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.8 - கூட்டணி முறிவு விலகல் என்று ஊடல் காட்டிய கருணாநிதி ராஜினாமா நாடகம் நடத்த தி.மு.க. தரப்பு மத்திய மந்திரிகளை ராஜினாமா கடிதத்துடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற ஒரு வார்த்தைக்காக தவம் கிடந்த தி.மு.க. தலைவர்களுக்கு அவர்கள் எண்ணப்படியே காங்கிரஸ் பிரணாப்முகர்ஜி மூலம் சிக்னல் காட்டியதும், உடனே செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் தரப்பில் பேசியுள்ளார் என்று சந்தோஷமாக தெரிவித்தனர். காங்கிரஸ் ஒரு படி முன்னேறி உள்ளதால் தங்கள் தரப்பு முன்னேற்றத்தை தெரிவிக்க தங்கள் ராஜினாமா நாடகத்தை ஒரு நாள் ஒத்தி வைத்துள்ளனர்.
ஆரம்பம் முதலே தி.மு.க. காங்கிரஸ் உறவு மேலும் இனித்தாலும் உள்ளுக்குள் வேம்பாக கசந்து கொண்டிருந்தது. கருணாநிதி பூசி மழுப்பி மூடி மறைத்தாலும் அது வெடிக்கவே செய்தது. ஐவர் குழு என்ற ஐவாஷ் குழு அமைத்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் தொடர்ந்து அதை நீடித்து மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்தது. கருணாநிதி விலகல் தீர்மானத்தில் சொன்னதுபோல் கருணாநிதியும், கழகமும் எந்த காலத்திலும் சந்திக்காத சோதனையாக அது அமைந்தது.
ஒரு கட்டத்தில் சீட்டு பேரம் என்பதை தாண்டி தனது மகள் கனிமொழி துணைவியார் ராஜாத்தி அம்மாள் மீது சம்மன் பாயாமல் இருக்க காங்கிரசை கருணாநிதி வலியுறுத்த தொடங்கினார். இதை வைத்து விலக கருணாநிதி முடிவெடுத்தார். மறுபுறம் காங்கிரசின் எண்ணம் வேறாக இருந்தது. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் கேரளா, மேற்கு வங்காளத்தில், பாண்டிச்சேரியில், அஸ்ஸாமில் காங்கிரஸ் ஸ்பெக்ட்ராம் ஊழலில் திளைத்து தி.மு.க.வுடன் கைகோர்த்து வருவது எதிர்க் கட்சிகள் பிரச்சாரத்தில் பிரதானமாக இருக்கும் ஆகவே தமிழ்நாட்டை மட்டும் பார்த்தால் மற்ற மாநிலங்களை கோட்டைவிட வேண்டி இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டாலும் மற்ற 4 மாநிலங்களில் ஊழல் தி.மு.க.வை கைகழுவி விட்டோம். ராசா மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வுடன் தொகுதி ஒதுக்கீட்டை காரணமாக வைத்து முரண்டு பிடித்தனர். இரு தரப்பிலும் மறைமுகமாக வேறு காரணம் இருந்தாலும் 3 சீட்டுக்காக உடைத்ததாக விலகல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார்.
காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. விலகல் நாடகம் நடத்தினாலும், ராஜினாமாவை திங்கட்கிழமை வரை தள்ளி வைத்து காங்கிரஸ் இறங்கி வராதா என்று காத்திருந்தார். பின்பு ராஜினாமா லட்டரை பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பாமல் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
இடையில் குடும்ப தொலைக்காட்சி முதல் அனைத்து சொந்த தொலைக்காட்சிகளிலும் அறிவாலயம் பக்கம் 5 பேர் கும்பலாக சென்றால் கூட அழைத்து வந்து பாரீர், பாரீர் அரசியல் கட்சிகள் அமைப்புகள் எல்லாம் காங்கிரஸ் வெளியேறியதால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று காட்டிய கூத்தும் நடந்தது.
கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அறிவாலயத்திற்கு வந்து கருணாநிதியை கட்டி பிடித்து ஒப்பாரி வைத்து விட்டு வெளியே வந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் தி.மு.க. பெரும்பலம் பெற்று விட்டதாகவும் தாங்கள் மிகுந்த சந்தோஷமாக உள்ளதாகவும் கூறிக்கொண்டனர்.
இதில் மிகப்பெரிய காமெடி: தி.மு.க. செய்தி தொடர்பாளர்? திராவிடர் கழக தலைவர் வீரமணியின் அறிக்கைதான். உலக தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை சந்தோஷப்படுகின்றனர் என்று கூறி காமெடி பண்ணினார். அப்படியானால் தி.மு.க. காங்கிரஸ் உறவை உலக தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை இது நாள் வரை வெறுத்து வந்தார்களா என்று கேட்க தோன்றுகிறது.
திருமாவளவனும் தனது பங்கிற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. அணிக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நினைக்க மறந்து விட்டார்கள். அதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாத புத்தி. தங்கள் குடும்பத்திற்கு பங்கம் வராமலிருக்க கழகத்தை அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதுதான் அது.
இதுதான் நேற்றைய தினம் டெல்லியில் நடந்தது. இவர்கள் ராஜினாமா லட்டரை கையில் வைத்து கொண்டு கொடுக்காமல் மீடியாக்களை அழைத்து பேசிக்கொண்டு இருந்ததும் காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, ஆசாத் ஆகியோர் கருணாநிதியிடம் பேசியதும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.
``வரும் ஆனா வராது'' என்று வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் இவர்கள் கூட்டணி கதை மாறிபோனது.
இறுதியில் ராஜினாமாவை எப்படியும் மாலைக்குள் கொடுத்து தானே ஆகவேண்டும் அப்ப முடிவு வரத்தானே போகுது என்று செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
வீரவசனம் பேசுவதும் காலில் விழுவதும் காலை வாருவதும் எங்களுக்கு கை வந்த கலை வீரவசன படலம் முடிந்ததால் தற்போது காலில் விழும் படலம் என்று காங்கிரஸ் இறங்கி வருவதற்கு தோதாக 1 நாள் ராஜினாமா நாடகத்தை தள்ளி வைத்ததாக முடிவில் அறிவித்துள்ளனர். ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் ஒரு நாள் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
இப்பொழுது அடிமட்ட தி.மு.க. தொண்டனின் கேள்வி எல்லாம் தலைவா காங்கிரஸ் வெளியேறியதால் சந்தோஷப்படுவதாக ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து படம் பிடித்து காட்டினீர்களே இப்போது மீண்டும் கூட்டணி வந்தால் தொண்டர்களுக்கு எல்லாம் கவலை உங்களுக்கு மட்டும் சந்தோஷமா என்று கேட்கிறான். அதற்கு தயாராக உடன் பிறப்புக்கு கடிதம் தயார் செய்ய தெரியாதா என்ன. நாளை மீண்டும் கூட்டணி சேர்ந்தால் அடிபொடி அமைச்சர்கள் கருணாநிதியின் ராஜதந்திரம் என்று கூறிக்கொள்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: மஸ்க்
01 Jul 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
சிவகாசி கோட்டாட்சியராக பாலாஜி பொறுப்பேற்ப்பு
01 Jul 2025விருதுநகர், சிகாசி கோட்டாட்சியராக மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து உயிரிழப்பு 44 ஆனது : ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு
01 Jul 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.&nb
-
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
01 Jul 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் இளைஞர் லாக்அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.