எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி, அக்.21 - ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் ரூ. 125 லட்சம் கோடியை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரத யாத்திரையில் அத்வானி தெரிவித்தார். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஐதராபாத்தில் ரதயாத்திரை நடத்தினார். அப்போது அவருக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று பல லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துவருகிறது. இதனால் நாட்டில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூபாய் 125 லட்சம் கோடி உள்ளது. அந்த கறுப்புப் பணம் முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மீட்கப்படும். அந்த பணத்தைக் கொண்டு நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பள்ளி, மருத்துவமனைகள் போன்றவற்றை அமைப்போம். நம்மைவிட சீனா அதிகமாக முன்னேறி வருகிறது. இதற்கு காரணம் அந்நாட்டு அரசு இளைஞர் சக்தியை மிக நன்றாக பயன்படுத்தி வருவதுதான். ஆனால் காங்கிரஸ் அரசு இளைஞர் சக்தியை சிறிதளவுகூட பயன்படுத்தாமல் இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரதயாத்திரை ஐதராபாத் ரஜ்வேல்பகுதிக்கு வந்தபோது நடிகை விஜயசாந்தி அத்வானியை சந்தித்து பேசினார். பின்னர் விஜயசாந்தி ரதத்தில் இருந்தபடியே கூறியதாவது, தெலுங்கானா தனி மாநிலம் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். காங்கிரஸ் அரசு இருக்கும் வரை தனித் தெலுங்கானா கிடைக்காது. பாரதிய ஜனதாவால் மட்டுமே தெலுங்கானா மாநிலத்தை தரமுடியும். ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க. கட்சி தனித் தெலுங்கானாவை ஆதரித்து வருகிறது. இதனால் தெலுங்கானாவுக்கு யாத்திரை வரும் அவருக்கு மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் அத்வானியின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஐக்கிய ஆந்திரா கூட்டு போராட்டக் குழு தலைவர் பேராசிரியர் சாமுவேல் கூறும்போது, தெலுங்குபேசும் அனைவரும் ஒற்றுமையாக ஒரே மாநிலத்தில் இருப்பதையே விரும்புகிறோம். ஆந்திராவை பிரிக்கத் துடிக்கும் அத்வானியின் ரத யாத்திரை தடுப்போம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.


