எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சமீப காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று ஜப்பானியக் காடை வளர்ப்புத் தொழில் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டுவதுடன், ஒரு மாத கால வயதிற்கு முன்பே விற்பனை செய் யப்படுவதால் அதிக முக்கியத்துவம் வாய்;ந்து விளங்குகிறது.
காடை இறைச்சி மற்றும் முட்டைகள் மிகச்சிறந்த சுவைமிக்க உணவாக விளங்குகிறது. அவற்றிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் இதர கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஒப்பிடும்போது அதிகமாக காணப்படுவதால் எல்லா வயது மக்களுக்கும் ஏற்ற உணவாக விளங்குகிறது.
காடை இனங்கள் : தற்பொழுது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்நாடு கால்நடை மருத் துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட TANUVAS நந்தனம் காடை-1, TANUVAS நந்தனம் காடை -2 மற்றும் TANUVAS நாமக்கல் காடை-3 ஆகிய ரகங்கள் இறைச்சி உற்பத்திக்காக தற்பொழுது தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெருவாரியாக வளர்க்கப்பட்டு வருகிறது.
காடை வளர்ப்பு முறை : காடைகளை வளர்க்க அதிகளவு முதலீடு தேவையில்லை. பயன்படுத்தாத கோழிப்பண்ணைகள் அல்லது குறைந்த முதலீட்டிலான கோட்டங்களில் காடைகளை வளர்க்கலாம். வசதிக்குத் தகுந்தாற்போல் ஆழ்கூளம் மற்றும் கூண்டுகளில் காடை களை கூண்டு முறையில் காடைகளை வளர்க்கும் போது அவற்றிற்கு நோய்க் கிருமிகளின் தாக்கம் குறைவதுடன் காடைகளை கையாள்வதும் எளிதாக இருப்பதால் ஆழ்கூளத்தைக் காட்டிலும் கூண்டு முறையில் வளர்ப்பதே சிறந்தது. ஆனால், அவற்றிற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகமாகத் தேவைப்படும்.
காடை குஞ்சுகள் பராமரிப்பு
ஒரு நாள் வயதுடைய இறைச்சி வகை காடை குஞ்சுகள் சுமார் 8.10 கிராம் எடையுடையதாக இருக்கும். முதல் பத்து நாட்களில் பருவநிலைக்குத் தகுந்தாற் போல் முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை வெப்பமும், அதன் பிறகு 7 நாட்கள் இரவு நேரங்களில் செயற்கை வெப்பமும் அளிப்பது நல்லது. நல்ல முறை யில் பராமரிக்கப்பட்ட இனப்பெருக்க காடைகள் மற்றும் குஞ்சு பொரிப்பான்களின் மூலம் பெறப்படும் காடை குஞ்சுகளில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான உயிரிழப்பே காணப்படும்.
பொதுவாக முதல் இரண்டு வார வயதில் பெரும்பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில் விழுந்து இறக்கும் இழப்பே அதிகமாகும். காடை குஞ்சு கள் தண்ணீர் பாத்திரங்களில் விழுந்து இறப்பதைத் தவிர்க்க தண்ணீரினுள் கோலி குண்டுகள் அல்லது கூலாங்கற்களை ஒருவாரம் வரை இடவேண்டும். தண்ணீர் பாத்திரங்களுக்கு பதிலாக நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்கள்(Nipple drinkers) மூலமும் தண்ணீர் கொடுக்கலாம். இவ்வாறு நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்களை பயன்படுத்துவதால் சுத்தமான தண்ணீரைக் தொடர்ச்சியாக காடை குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.
மேலும் காடை குஞ்சுகளின் கால்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால் அவற்றை வழவழப்பான பரப்பில் (செய்தித்தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் போது அதிக காடை குஞ்சுகள் நொண்டியாகி, நாளடைவில் தீவனம் மற்றும் தண் ணீர் எடுக்காமல் இறக்க நேரிடும். எனவே காடை குஞ்சுகளை பராமரிக்கும் போது அவற்றை சொர சொரப்பான காகிதப் பரப்பில்(Corrugated sheet) வளர்க்கலாம். அல்லது சணல் துணியைப் பரப்பி அதன் மேல் காடை குஞ்சுகளை முதல் மூன்று நாட்கள் வளர்க்கலாம். பின்னர், அவற்றினை வழவழப்பான செய்தித்தாள் போன்ற வற்றின் மேல் வளர்த்தாலும் கால்கள் ஊனமாவதில்லை. காடைகள் இரவில் தீவ னம் உட்கொள்ளத்தக்க வகையில் செயற்கை வெளிச்சம் அளிக்க வேண்டும்.
இறைச்சிக்காக காடைகள் இரண்டாவது வார வயதில் சுமார் 9c கிராம் எடையுடையதாக இருக்கும்.
வளர்பருவ பராமரிப்பு : இரண்டாவது வார வயது முதல் 4 அல்லது 5 வார வயதுடைய காடை களை வளர்பருவ காடைகள் (Grower quail) என்றழைக்கிறோம். இந்த வயதில் காடைகள் மிகுந்த சுறுசுறுப்புடனும் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவும் காணப் படும். இத்தகைய காடைகள் வேகமாக வளர்வதால் அவற்றிற்கு தொடர்ச்சியாக தீவனம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சிவகை காடைகள் : 3 வார வயதில் சுமார் 150 கிராம் உடல் எடையும், 4 வார வயதில் சுமார் 210 கிராம் எடையும் உடையதாக இருக்கும்.
தீவனம் : காடைகளுக்கு இரண்டு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும். முதல் இரண்டு வாரங்கள் ஆரம்பகால தீவனத்தையும்; (Cuail Starter feed) பின்னர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இறுதிகால தீவனத்தையும் ; (Quail Finisher) அளிக்க லாம்.
காடைத் தீவனத்தை கோழித் தீவனத்திற்கு பயன்படுத்தும் மூலப்பொருட் களைக் கொண்டே தயாரிப்பதால், பிரத்யேக காடைத் தீவனம் கிடைக்காத பட்சத் தில் இறைச்சிக் கோழிகளுக்கு பயன்படுத்தும் முன் ஆரம்பகாலத் தீவனத்தையே (பிராய்லர் பிரிஸ்டார்டர்) முதல் நான்கு வாரங்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு காடையானது 200 கிராம் உடல் எடையை அடைய சுமார் 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.
காடை வளர்ப்பில் தீவனச்செலவு 70 விழுக்காடுகளுக்கும் அதிகமாக இருப்ப தால், தீவனச்செலவை குறைக்க வேண்டும். சொந்தமாக தீவனம் தயாரிப்பதின் மூலம் தீவனத்திற்கான செலவைக் குறைக்க முடியும்.
தண்ணீர் : காடை வளர்ப்புக்கு தீவனமும் தண்ணீரும் மிகவும் இன்றியமையாத பொருள் களாகும். இவ்விரண்டும் நோய்க்கிருமிகளற்று சுத்தமாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் வருவதை தவிர்க்கலாம். எனவே, முதல் இரண்டு வாரங்கள் காடை குஞ்சுகளுக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த நீரைக் குடிநீராக அளிப்பது நல்லது. அதன் பின்னர் காடைகள் அருந்தும் தண்ணீரில் ஹைட்ரஜன் பெர்ஆக்ஸைடு என்ற கிருமி நாசினியை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து அளிக்கலாம்.
நோய்கள் : காடைகளின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதிக நோய் எதிர்ப்புத் திறனாகும். இதர கோழியினங்களைப் போன்று காடைகள் பெரும்பாலான நோய் களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், காடைகளுக்கு எந்தவித தடுப்பூசியும் அளிக்கத் தேவையில்லை. தண்ணீர் மற்றும் தீவனம் சுகாதாரமாக இல்லாமலிருந் ளதால் அல்லது நன்றாக பராமரிப்பு முறைகளைக் கையாளாமலிருந்தால் அவற்றிற்கு நோய்கள் வரவாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் நோய்கள் வந்தால் அவற்றின் காரணத்தை அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி கண்டறிந்து சரியான மருந்துகளை அளிக்கலாம்.
இதைத் தவிர காடைகளைத் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது இறைச்சி கோழிகளை தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய்வ; (Coccidiosis) ர வாய்ப்புள்ளது. இதனைத தடுக்க தீவனத்தில் இரத்தக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்துகளை (Anti-coceidials) கலந்து அளிக்கலாம். காடைகளை கூண்டு முறையில் வளர்க்கும் போது இரத்தக் கழிச்சல் நோய் பெரும்பாலும் வருவதில்லை.
காடைப்பண்ணைப் பொருளாதாரம்
தற்போது ஒரு காடைக்குஞ்சு ரூ. 4.50 முதல் ரூ.5.50 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. காடைத் தீவனமானது ஒரு கிலோவிற்கு ரூ. 28 முதல் ரூ.30 வரையில் கிடைக்கின்றன. ஒரு காடை அதன் விற்பனை வயது வரை சுமார் 500 கிராம் வரை தீவனம் உட்கொள்வதால், ஒரு காடை உற்பத்தி செய்ய ரூ. 19 முதல் ரூ.21 வரை செலவாகிறது.
ஒரு நாள் வயதுடைய காடைக்குஞ்சுகள் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலிருந்து பெறலாம். TANUVAS நாமக்கல் காடை -1” என்ற வீரிய ரக இறைச்சி வகை காடைகள் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின அறிவியல் துறையில் ரூ.5.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொகுப்பு : முனைவர் ப.ரவி, முனைவர் து.ஜெயந்தி, மற்றும் மருத்துவர் ந.ஸ்ரீபாலாஜி
தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி, மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக


