எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அசோலா என்பது என்ன?
அசோலா நன்னீரில் வாழும் மிதவை வகை பெரணியாகும். அசோலா தழைச் சத்தை நிலை நிறுத்தும் நீலப் பச்சைப் பாசியைக் கூட்டு வாழ்முறை நிலையில் கொண்டுள்ளது. இதனால் நெல்லிற்கு சிறந்த உயிர் உரமாக அசோலாவைப் பயன்படுத்தலாம். நீலப்பச்சைப் பாசியானது காற்று மண்டலத்திலிருந்து தழைச் சத்தை நிலைநிறுத்தும் திறன் கொண்டதாகும்.
சமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவன மாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 35 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. பீட்டாகரோட்டின் நிறமியானது வைட்டமின் ஏ. உருவாவதற்கு மூலப்பொருளாகும். இச்சத்து உள்ளமையால் நோய் எதிர்ப்பு சக்தி கோழிகளுக்கு அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உட்கொள்வ தால் கண்பார்வைக்கு உகந்தது.
அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.
அசோலாவின் நன்மைகள் என்னென்ன?
1. அசோலாவை தீவனமாகப் பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு அடர்தீவனச் செலவில் 20 பைசா சேமிக்கலாம் என்று ஆராய்ச்சிபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச்சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல் லாத திடப்பொருளின் அளவு மூன்று விழுக்காடு வரை கூடுகிறது.
3. அசோலா இடப்பட்ட கோழியின் முட்டையின் எடை, ஆல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர்தீவனம் மற்றும் இடப்பட்ட கோழியின் முட்டை யின் அளவை விட அதிகமாக உள்ளது.
பரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிற்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு) : பால்மாடு, உழவு மாடு - 1-1.5 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி - 20-30 கிராம், ஆடு – 300-500 கிராம், வெண்பன்றி – 1.5-3 கிராம், முயல்- 100 கிராம்.
அசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள் (20 சதுர அடி அளவிற்கு) அசோலா தாய்வித்து – 5 கிலோ, வளமான மண் - 2 செ.மீ, சமமான அளவு, பசுஞ்சானம் -5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் - 100 கிராம், சில்பாலின் ஷீட் - 20 சதுர அடி, தண்ணீர் – 100 லிட்டர்.
அசோலாவை உற்பத்தி விளக்க அட்டவணை : நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும், பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்கவும், பாலித்தீன் ஷீட்டின் மேல் 2 செ.மீ அளவில் மண்இட்டு சமன் செய்யவும், இதன் மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றவும், பின்னர் பாத்தி ஒன்றிற்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை இடவும், அதன் பின்னர் 5 கிலோ பசுஞ் சாணம் கரைத்து இடவேண்டும், பின்னர் இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து இடவேண்டும், தினமும் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்கிவிட வேண்டும், 10-15 நாட்களுக்குப் பின்னர் மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம்.
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கக்கூடிய முறைகள் : அசோலாவை கோழி, கறவை மாடு, உழவு மாடு, வெண்பன்றி, வாத்து, முயல் மற்றும் ஆடுகளுக்கு நேரடியாக பசுந்தீவனமாக வழங்கலாம். அசோலாவை கால்நடைகளுக்கு உயிர்த்திரளாகவோ, உலர் அசோலாவாகவோ, சிறு உருண்டை களாகவோ மற்றும் பதனம் பசுந்தீவனமாகவும் அளிக்கலாம்.
உலர் அசோலா : அசோலாவை வெயிலில் உலர்த்தி, சிறு துகள்களாக மாற்றி தீவனமாக அளிப்பது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இவற்றை அடர் தீவனத்துடன் எளிதாக கலந்து அளிக்கலாம். மேலும் இவை நீண்ட கால சேமிப்புத் திறன் உடையவை.
அசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவ தற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்பு வலைகள் அமைக்கப்பட வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.
ஆகவே அசோலாவை தீவனமாக அளிப்பதால் கால்நடை மற்றும் கோழி களின் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கு அதிக வருமானம் பெற உதவுகிறது.
அசோலாவில் உள்ள சத்துக்கள் (மூ உலர் எடை அளவில்) புரதச்சத்து –25-30, தழைச்சத்து –5.0, மணிச்சத்து -0.5, சாம்பல் சத்து -2.0-4.5, சுண்ணாம்புச்சத்து–0.1-1.0, மக்னீசியச்சத்து –0.45, இரும்புச்சத்து –0.26, கொழுப்புச்சத்து –3.0-3.3, சர்க்கரை –3.4-5.5, மாவுச்சத்து –6.5.
தொகுப்பு : முனைவர். து.ஜெயந்தி, முனைவர். ப.ரவி, மற்றும் மருத்துவர் ந.ஸ்ரீபாலாஜி
தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக


