எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை கடலூர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.மேட்டூர் அணையிலிருந்து 02.10.2017 அன்று பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையினை வந்தடைந்து, கல்லணையிலிருந்து 05.10.2017 அன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16.10.2017 அன்று கீழணையை வந்தடைந்தது. கீழணை வந்தடைந்த தண்ணீர் தேக்கப்பட்டு 26.10.2017 அன்று பாசனத்திற்காக வடவார் மூலம் வீராணம் ஏரிக்கு திறந்தவிடப்பட்ட தண்ணீரை படிப்படியாக தேக்கி வைத்து இன்று பாசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது.
பாசனத்திற்கு தண்ணீர்
இராதா வாய்க்கால் மதகு வழியாக வினாடிக்கு 10 கன அடி வீதமும், வீராணம் புதிய மதகு வழியாக வினாடிக்கு 25 கன அடி வீதமும், இதன் தொடர்ச்சியாக வீராணம் ஏரியிலுள்ள அனைத்து 34 மதகுகளும் திறக்கப்பட்டு அனைத்து மதகுகளும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டங்களை சேர்ந்த 102 கிராமங்களில் உள்ள மொத்தம் 44,856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும். மேலும், அவ்வப்போது பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.அன்பரசு, உதவி செயற்பொறியாளர் அருணகிரி, வேளாண்மை இணை இயக்குநர் நாட்ராயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பாத்திபன், பாஸ்கரன், ஐயப்பன், சண்முகம் மற்றும் வீராணம் ஏரி விவசாய சங்க தலைவர் பாலு, இராதா வாய்க்கால் பாசன தலைவர் ரங்கநாயகி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.