எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இயற்கை ஆர்வலரின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலர் ஒருவரின் புதுமையான முயற்சியால் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிகு திண்பண்டங்களை வீட்டிற்கே தேடி வந்து விநியோகித்திடும் புதுமையான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்து வருகிறது.
பொதுவாக சிறுதானியங்கள் என்பது வரகு,சாமை,தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளை குறித்திடும்.பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இன்றைய காலகட்டத்தில் குறைவான மழைபொழிவு,குன்றிய மழைவளம்,தேவைக்கதிகமான உரப்பயன்பாடும் அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடுகளும்,வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம் போன்ற காரணிகள் சிறுதானியங்களே வருங்கால உணவாகும் என்ற கருத்தினை வலுப்பெற வைக்கிறது.கடந்த காலங்களில் அரிசியை பயன்படுத்திட வசதியில்லாத ஏழை எளிய மக்களின் உணவாக திகழ்ந்த சிறுதானியங்கள் இன்று பன்மடங்கு வசதி படைத்த செல்வந்தர்களின் அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.நம்முடைய முன்னோர்கள் போல் 80முதல்100வயது வரையில் ஆரோக்கியமாக வியாதிகள் இல்லாமல் வாழந்திட சிறுதானியங்களான வரகு,குதிரைவாலி,சாமை,தினை,காடைக்கன்னி,கம்பு, சோளம்,கேழ்வரகு ஆகியவற்றை சமைத்து அன்றாட உணவாக பயன்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலரும் அருந்தானிய உணவுக்கலை நிபுணரும், முதுநிலை பட்டதாரியுமான க.காளிமுத்து என்பவர் தற்போது அன்னவயல் என்ற பெயரில் சிறுதானிய சிறப்பு திண்பண்டங்களை பாரம்பரிய முறையில் சுவைபட தயாரித்து அவற்றினை பக்குவமாக பேக்கிங் செய்து அலைபேசியில் அழைத்;து ஆர்டர் தருவேரின் இல்லங்களைத் தேடிச் சென்று விநியோகித்து வருகின்றார்.திருமங்கலம் நகர் ராஜாஜி 7வது தெருவில் உள்ள அலுவலகத்தில் அருந்தானிய உணவுக்கலை நிபுணர் காளிமுத்து,அவரது உதவியாளர்களுடன் இணைந்து தினம்தோறும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன்படி நாள்தோறும் வரகில் தயாரிக்கப்படும் அச்சுமுறுக்கு,தினையால் தயாரிக்கப்படும் சீரணி,அதிரசம்,லட்டு குதிரைவாலியால் தயாரிக்கப்படும் காராச்சேவு,சீவல்,மிக்சர் போன்ற பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் செக்கில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணையை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.தற்போது பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 3காரவகைகள்,3சுவீட் வகைகள்,3தின்பண்ட வகைகள் பேமிலிகிட் ஆக ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேயற்கையான ரசாயன உரங்கள் தவிர்த்து முற்றிலும் இயற்கையான முறையில் அன்னவயலில் விளைவிக்கப்படும் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்களை வீட்டில் இருந்தபடி பெற்றிட ஒருநாள் முன்னதாக 99435-95340என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய தின்பண்டங்கள் மறுநாள் உரிய நேரத்தில் வீடுதேடி வந்து விடுகிறது.அதே போல் அன்னவயலில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்படும் 6வகையான காய்கறிகள் ரூ.100க்கு வீடு தேடிவந்து விற்பனை செய்யப்படுகிறது.மேலும் முற்றிலும் புதுமையான முறையில் தினம் தோறும் மாலை நேரங்களில் இங்கு தயாரிக்கப்படும் வெற்றிலை பஜ்ஜி,வாழைப்பூ வடை,பசலைகீரை பஜ்ஜி இவற்றுடன் முடக்காத்தான்,முசுமுசுக்கை, வாழைத்தண்;டு, கருவேப்பிலை மற்;றும் முருங்கை சூப் வகைகள் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவைகளாகும்.
இயற்கை ஆர்வலர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு திருமங்கலம் நகர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்டு வாசலுக்கு தேடிவரும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் மிகுந்த ருசியுடன் கிடைப்பதால் தினம் தோறும் ஏராளமானோர் தங்களுக்காகவும் தங்களது குழந்தைகளுக்காகவும் பாரம்பரிய சிறுதானிய தின்பண்ட வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்கின்றனர்.இயற்கை ஆர்வலர் காளிமுத்து மேற்கொண்டுள்ள இந்த புதுமையான முயற்சியின் காரணமாக தற்போது திருமங்கலம் நகர மக்கள் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை வாங்கி உண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை திருச்சியில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025சென்னை : திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
09 Nov 2025பெங்களூரு : கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
-
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளுக்கு
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் விழா: ரூ.773 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025திருச்சி : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.773.
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
09 Nov 2025பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணிய
-
36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2025சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு
09 Nov 2025பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது.
-
வாக்கு திருட்டு விவகாரத்தில் மேலும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்: ராகுல் காந்தி பேட்டி
09 Nov 2025பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை.
-
அந்தமான் கடலில் நிலநடுக்கம்
09 Nov 2025போர்ட் பிளேர் : அந்தமான் கடலில் நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.


