எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாடுகளின் உடல் நலத்திற்கும், முழு பால் உற்பத்தியை பெறுவதற்கும் கொடுக்கப்படும் தீவனம் தரமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக மாடுகளுக்கான சமச்சீர் தீவனமென்பது உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தற்போதைய தீவன மேலாண்மையில் பெரும்பாலும் இவ்வகைப் தீவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி யாவே மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் மாடுகள், மேய்ச்சலுக்கும் அனுப்பப்படுகின்றன.
அவ்வாறு தீவனங்களைத் தனித்தனியாக கொடுப்பதற்குப் பதிலாக அனைத் தையும் ஒன்றாக கலந்து முழு கலப்புத் தீவனமாக மாடுகளுக்கு கொடுக்கலாம். இந்த தீவன கலவையை சரியான அளவிலும், விகிதத்திலும் தயாரித்து அளிக்கும் போது ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும், மிகுதியையும் தவிர்க்க இயலும். எனவே, மாடுகளுக்கு முழுகலப்பு தீவனம் அனிப்பது என்பது ஒரு பயனுள்ள இலாபகரமான முறையாகும்.
முழு கலப்புத் தீவனம் என்றால் என்ன? முழு கலப்புத் தீவனம் (டி.எம்.ஆர். வுழவயட ஆiஒநன சுயவழைn) என்பது உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படும் சமச்சீர் தீவனக் கலவையாகும். முழு கலப்புத் தீவனம், மாடுகள் ஒவ்வொரு கவளம் உட்கொள்ளும்போதும் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதை அதிகபட்சம் உறுதி செய்கிறது.
முழு கலப்புத் தீவனத்தின் சிறப்புகள் என்ன?
மாடுகள் உண்ணும் ஒவ்வொரு கவள தீவனமும் உலர், பசுந்தீவனம், அடர் தீவனத்துடன் சீராக கலந்த ஓர் கலவையாகையால் அசையூண் வயிற்றில் தீவனச் செரிமானம் அதிகமாகிறது.
உலர் தீவனத்தையும் அடர் தீவனத்தையும் தனித்தனியாகக் கொடுக்கும் போது அசையூண் வயிற்றில் அமில காரத்தன்மை மாறுபடுகின்றது. ஆனால் முழு கலப்புத் தீவனம் கொடுக்கும்போது மாடுகளின் அசையூண் வயிற்றில் அமில காரத்தன்மை நாள் முழுவதும் சீராக நிலைப்படுத்தப்படுகிறது.
சீரான புரதமும் மாவுச்சத்தும் நார்ச்சத்துடன் அசையூண் வயிற்றில் நுண்ணுயிரிகளுக்கு ஒருசேர கிடைப்பதால் முன் இரைப்பை நொதித்தல் மேம்படுத்தப்பட்டு பசுக்களின் உற்பத்தி திறன், பாலின் தரம், உடல் நலன் சிறப்படைகிறது.
முழு கலப்பு தீவனத்தை கொடுக்கும்பேது மாடுகளுக்கு தீவனம் உட்கொண்ட உணர்வு திருப்திகரமாக இருக்கிறது. இது மேலும் தீவன எடுப்பைத் தூண்டி, பால் உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கிறது.
முழு கலப்பு தீவனத்தை தயாரிப்பது எப்படி? மாடுகளில் உடல் எடை, உடற்பருவம் (சினைக் காலம், உடல் வளர்ச்சி) மற்றும் பால் உற்பத்தியைப் பொருத்து உலர், பசுந்தீவனம், அடர்தீவனம் கலப்பு விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தீவன பொருட்களின் எடை உலர்ந்த எடையில் (நீர்சத்து முழுவதுமாக நீக்கப்பட்ட நிலையில்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஒரு கிலோ உலர்நிலை எடைக்கு நிகராக 5 கிலோ பசுந்தீவனம் சேர்க்கப்படவேண்டும். மிதமான பால்உற்பத்தியில் உள்ள மாடுகளுக்கு குறைந்தபட்சம் 70:30 என்ற விகிதத்திலும், அதிக பால் உற்பத்தியுள்ள மாடுகளுக்கு அதிகபட்சம் 40:60 என்ற விகிதத்திலும் உலர், பசுந்தீவனத்துடன் அடர்தீவனம் சேர்க்கப்பட வேண்டும்.
உதாரணமாக சிறையில்லாத வளர்ந்த பசுமாட்டிற்கான மாதிரி முழு கலப்புத் தீவனத் தயாரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கிடப்படும் அளவுடன் 10.20 சதவிகிதம் கூடுதல் முழு கலப்புத் தீவனம் கொடுத்து பால் உற்பத்தியை கண்காணித்து அதற்கேற்ப மாடுகளுக்குத் தேவையான சரியான தீவன அளவை பண்ணையாளர்கள் தீர்மானிக்கலாம்.
உடல் எடை (கிலோ) - 450, பால் உற்பத்தி (4மூ கொழுப்பு) (லி) -15,12,8. முழு கலப்புத் தீவன அளவு (கிலோ) – காலை -18, 16, 15. மாலை -17, 16, 14. கலப்பு விகிதம் - 62:38, 64:36, 67:33. உலர் தீவனம் + பசுந்தீவனம்) + அடர்தீவனம் - கிலோ ஒரு மாட்டிற்கு, ஒரு நாளைக்கு (21+7)+6.5, (21+5)+5.5, (21+4)+4.5, உத்தேச செலவு (கிலோவிற்கு) - ரூ. 6.12, 5.70, 5.00.
முழுநேர கலப்புத் தீவனம் மட்டுமே மாடுகளுக்கு கொடுத்தால் போதுமா? ஆம். ஊட்டச்சத்துகள் கிடைக்கும் அளவு சரியாக கணக்கிடப்பட்டால் முழு கலப்புத் தீவனம் மட்டுமே மாடுகளுக்கு போதுமானது. மேய்ச்சலும் தேவையில்லை.
முழுநேர கலப்புத் தீவனம் தயாரித்து எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்? பசுந்தீவனம் சேர்க்கும் பட்சத்தில் முழு கலப்புத் தீவனத்தை அன்றே மாடுகளுக்கு கொடுத்துவிட வேண்டும். பசுந்தீவனம் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட முழு கலப்புத் தீவனக் கட்டிகள் சில மாநிலங்களில் வணிகரீதியில் விற்கப்படுகின்றன. இதனை மாதக்கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
என்னென்ன பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களைச் சேர்க்கலாம்? கம்பு நேப்பியர் ஓட்டுத்தீவனம் (கோ4) போன்ற புல்வகைகள், தீவன சோளம், பயறு வகைத் தீவனங்களான தட்டைப்பயறு, வேலிம்பால் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உலர் தீவனங்களான வைக்கோல், சோளத்தட்டை போன்றவற்றையும் சேர்க்கலாம். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் இரண்டையும் கலந்து தயாரிப்பது சிறந்தது. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் சுமார் 1-3 அங்குலமுள்ள சிறு துண்டு களாக நறுக்கப்பட்டு முழு கலப்புத் தீவனம் தயாரிக்க வேண்டும். மரஇலைகளை பச்சையாகவோ உலர்த்தியோ பயன்படுத்தலாம்.
அடர்தீவனத்திற்கு பதிலாக தீவன மூலப்பொருட்களைச் சேர்க்கலாமா? ஆம். பொதுவாக அடர்தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து தீவன மூலப்பொருட் களையும் நேரடியாகவே முழு கலப்புத் தீவனத்தில் சேர்க்கலாம். அதனுடன் உப்பு மற்றும் தாதுஉப்புக் கலவையையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்?
முழு கலப்புத் தீவனத்தின் நன்மைகள் என்ன?
1. உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகியவற்றை தனித் தனியாக மாடுகளுக்கு கொடுக்க வேண்டியதில்லை.
2. நன்றாக கலந்த தீவனமாகையால் குறிப்பிட்ட தீவன மூலப்பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்பதும், சில தீவன மூலப்பொருட்களை உண்ணா மல் விடுவதும் தவிர்க்கப்படுகிறது.
3. மாடுகளுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளிவிலான உலர் மற்றும் அடர் தீவனத்தை அவற்றின் உடல்நிலை மற்றும் உற்பத்திக்கு ஏற்றவாறு கொடுப்ப தால் தீவனம் விரையமாவது குறைகிறது.
4. பண்ணைகளில் பால் உற்பத்திக்குத் தகுந்தவாறு மாடுகளை குழுவாக பிரித்து முழு தீவனக் கலவையை அளிக்கும்போது மாடுகளின் உற்பத்திக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறுகின்றன.
5. முழு கலப்பு தீவனத்தை மாடுகளுக்கு தருவதன் மூலம் மாட்டின் இனத் தினைப் பொருத்து பால் உற்பத்தி சுமார் 10 சதவிகிதம் உயர்வதாக ஆய்வு மேற்கோள்கள் தெரிவிக்கின்றன.
6. பாலில் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச்சத்துகளும் சீராக இருக்கும்.
7. ஒரு நாளில் தீவனம் எடுக்கும் அளவை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தீவன செலவை குறைக்க முடியும்.
8. குறைந்த அளவிலான மரபுசாரா தீவன மூலப்பொருட்கள், தரம் மற்றும் ருசி குறைந்த தீவனப் பொருட்களை எளிதில் முழு கலப்புத் தீவனமாக மாற்றி தரலாம்.
9. அமில நோய், கீட்டோன் செறிவுநிலை அதிகரித்தல் மற்றும் மாடுகளின் நான்காம் இரைப்பை இடமாற்றம் ஆகிய நோய்கள் பெருமளவு தடுக்கப் படுகிறது.
சிரமங்கள் என்ன?
மாடுகளின் உடல் எடை மற்றும் பால் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும். நடுத்தர மற்றும் பெரிய மாட்டுப் பண்ணைகளுக்கு முழு தீவன கலவை தயாரிக்க தீவன டி.எம்.ஆர். கலவை இயந்திரம் தேவைப்படுகிறது. சிறு பண்ணைகளுக்கு குறைந்தபட்சம் உலர் மற்றும் பசுந்தீவனங்களை நறுக்கும் இயந்திரம் தேவைப்படுகிறது. வைக் கோல் மற்றும் சோளத்தட்டை ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிய பின்பு டி.எம்.ஆர். கலவை இயந்திரத்தில் சேர்க்க வேண்டும்.
தொகுப்பு : முனைவர். து.ஜெயந்தி, முனைவர். ப.ரவி, மற்றும் மருத்துவர் ¬ந.ஸ்ரீபாலாஜி, தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


