முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு பிரச்சினை; வருமானவரி அலுவலகத்தில் வக்கீல்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜன.- 3 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மற்றும் மத்திய அரசுகளின் போக்கை கண்டித்து மதுரை வக்கீல்கள் நேற்று வருமான வரி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்தும், மத்திய அரசு மவுனம் காத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து 100 -க்கும் மேற்பட்டோர் வக்கீல்கள் சங்கதலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் தலைமையில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி தல்லாகுளம் வழியாக சென்று பீ.பி.குளம் வருமான வரி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. கேரளா மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து வருமானவரி அலுவலகம் முன்பு அமர்ந்து வக்கீல்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago