எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அமைச்சர் கடம்பூர்ராஜூ தொடங்கி வைத்து சிறப்புறையர்றறினார். மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் தலைமை வகித்தார். போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விழாப் பேருரையில் பேசியதாவது:
பயிற்சி வகுப்புகள்
அம்மா , ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால், அனைவரும் கல்வி அறிவு பெற்று இருக்க வேண்டும் என்ற உயர்ந்து நோக்கத்தோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள். இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப அம்மா , காவல் தெய்வமாக இருந்து தமிழகத்தை பாதுகாத்து வந்தார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். விலையில்லா புத்தகம், குறிப்பேடுகள், இலவச பேருந்து பயண அட்டை, சீருடை, காலணிகள், வண்ண பென்சில்கள், சிலேட்டுகள், உலகப்படம், விலையில்லா மிதிவண்டி என பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத கல்வி புரட்சியினை அம்மாவின் அவர்களின் அரசு தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஏற்படும் மன உலைச்சலை போக்கிடும் வகையில், தமிழக அரசு கிரேடு முறையை அமல்படுத்தியது. மேலும், பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பெறும் மதிப்பெண்களை 10 நிமிடத்தில் அவர்களது அலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு நீட் தேர்வு அறிவித்திருந்த போது மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை அறிந்து, அம்மா ஒருவருட கால அவகாசம் கேட்டார்கள். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த வருடம் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. இவ்வருடம் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கிடும் வகையிலும், சிறந்த பயிற்சி அளித்திடும் வகையிலும், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஏதுவாக தமிழகத்தில் ஒன்றிய அளவில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நேசனல் பொறியியல் கல்லூரியில் 350 மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில வழியில் போட்டித் தேர்வு மற்றும் திறன் பயிற்சிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. 2018 ஏப்ரல் 9ம் தேதி முதல் ஒரு மாதகாலத்திற்கு பயிற்சிகள் திட்டமிட்ட முறையில் இணையதளம் மற்றும் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. இதனை மாணவ, மாணவயிர்கள் நன்கு முறையில் பயன்படுத்திக் கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்கள்.
இவ்விழாவில் இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை முனைவர்.அ.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மனோகரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் பி.அனிதா, சேர்மன், நேஷனல் பொறியியல் கல்லூரி கே.ரா.ராமசாமி, இயக்குநர் நேஷனல் பொறியியல் கல்லூரி சொக்கலிங்கம், மேனேஜிங் டைரக்டர் நேஷனல் பொறியியல் கல்லூரி கே.ரா.அருணாசலம். நகராட்சி ஆணையர், க.அச்சையா, நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.சண்முகவேல், வட்டாட்சியர் டி.ஜாண்சன் தேவசகாயம், மாவட்ட கல்வி அலுவலர் வி.சீனிவாசன், ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.


