எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன்; முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தலைமை வகித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்,
சிவகங்கை மாவட்டம் சுதந்திர போராட்டத்திற்கு போராடி வெற்றி கண்ட வீரம் நிறைந்த மண்ணாகும். இந்த மண்ணிற்கு மீண்டும் ஒரு மணிமகுடம் சூடும் வகையில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 98.50மூ தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்தமைக்கு மாவட்ட முழுவதும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளோம். மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவே இதற்கு முழுக் காரணமாகும். நீங்கள் கூடி உழைத்த முயற்சியில் கிடைத்த வெற்றி எங்களை மாவட்டத்தில் தலைநிமிரச் செய்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணியாகும். ஒருவருக்கு திருப்புமுனையை உருவாக்கும் வல்லமை படைத்த சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு மாணவனும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறும்போது அந்த மாணவன் திரும்பி பார்க்கையில் அவன் முகத்தில் தெரிவது அவனுக்கு வழிகாட்டியே அந்த ஆசிரியர் முகம்தான். அதன் பின்னர்தான் தனது பெற்றோர்கள் பற்றி நினைவு வரும். அந்த அளவிற்கு ஆசிரியர் பணி மிக உன்னதமாகும். அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்களிடம் பயிலும் மாணவர்களை சிறந்த வல்லுநர்களாக உருவாக்கும் திறன் உள்ளது. அதன்படி சிறந்த முறையில் மாணவர்களை உருவாக்கிட வேண்டும். மாணவர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு மேலாக ஆசிரியர்களை நினைத்து தங்களை நல்வழிப்படுத்த முன்வரும் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றாகப் படித்து சிறந்த சாதனையாளராக வேண்டும். தற்பொழுது 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்;வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சிறந்த சாதனை படைத்துள்ளீர்கள். சாதனை பெறுவது இயல்பு. ஆனால் அதை தக்கவைப்பது என்பது இங்குள்ள ஒவ்வொரும் தலையாகிய கடமையாகும். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்; இந்த வெற்றியை
தக்க வைக்க வேண்டும். அதேபோல் மேல்நிலை தேர்வு முடிவுகளில் சிவகங்கை மாவட்டம் 6-ம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்திட வேண்டும். உங்களுடைய வெற்றிக்கு மாவட்ட நிர்வாகம் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும். நீங்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும். வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தெரிவித்தார்.
பின்னர் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 182 பள்ளிகளுக்கும், 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 54 பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கியதுடன் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் தனித்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டும் விதமாக 12ம் வகுப்பை சேர்ந்த 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 - காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 10ம் வகுப்பை சேர்ந்த 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,000 - காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கியதுடன் மேலும் நடப்பாண்டில் விசாலயன்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியை தமிழக அரசால் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரிமுத்து, சகிதா மற்றும் அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.